காலில் காயத்துடன் வந்து வாக்களித்த சூர்யா!
சென்னை: காலில் காயம் ஏற்பட்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்தார் நடிகர் சூர்யா.
சென்னை தி நகர் கிருஷ்ணா தெருவில் சிவகுமார் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் இந்தி பிரச்சார சபாவில் உள்ள வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட வேண்டும்.

இன்று பிற்பகல் குடும்பத்துடன் சென்று தங்கள் வாக்கைப் பதிவு செய்தார் சிவகுமார்.
அவருடன் மகன்கள் சூர்யா, கார்த்தியும் வாக்களித்தனர்.
அப்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சற்று தாங்கித் தாங்கி நடந்து வந்த சூர்யா சிரமம் பார்க்காமல் வரிசையில் நின்று வாக்களித்தார்.
ஆனால் அவரது மனைவி நடிகை ஜோதிகா வாக்களிக்க வரவில்லை.
மும்பையில் நடந்த அஞ்சான் படப்பிடிப்பின்போது சூர்யாவுக்கு காலில் காயமேற்பட்டது நினைவிருக்கலாம். வாக்குச் செலுத்துவதற்காகவே அவர் மும்பையிலிருந்து சென்னை வந்தார். இன்று மாலை மீண்டும் மும்பை திரும்புகிறார்.


Click it and Unblock the Notifications











