Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காலில் காயத்துடன் வந்து வாக்களித்த சூர்யா!
சென்னை: காலில் காயம் ஏற்பட்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்தார் நடிகர் சூர்யா.
சென்னை தி நகர் கிருஷ்ணா தெருவில் சிவகுமார் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் இந்தி பிரச்சார சபாவில் உள்ள வாக்குச் சாவடியில் ஓட்டுப் போட வேண்டும்.
இன்று பிற்பகல் குடும்பத்துடன் சென்று தங்கள் வாக்கைப் பதிவு செய்தார் சிவகுமார்.
அவருடன் மகன்கள் சூர்யா, கார்த்தியும் வாக்களித்தனர்.
அப்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சற்று தாங்கித் தாங்கி நடந்து வந்த சூர்யா சிரமம் பார்க்காமல் வரிசையில் நின்று வாக்களித்தார்.
ஆனால் அவரது மனைவி நடிகை ஜோதிகா வாக்களிக்க வரவில்லை.
மும்பையில் நடந்த அஞ்சான் படப்பிடிப்பின்போது சூர்யாவுக்கு காலில் காயமேற்பட்டது நினைவிருக்கலாம். வாக்குச் செலுத்துவதற்காகவே அவர் மும்பையிலிருந்து சென்னை வந்தார். இன்று மாலை மீண்டும் மும்பை திரும்புகிறார்.