நாகார்ஜுனாவுக்கு நேரில் ஆறுதல் சொன்ன சூர்யா!
ஹைதராபாத்: தந்தை ஏ நாகேஸ்வரராவை இழந்து தவிக்கும் நடிகர் நாகார்ஜுனாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் சூர்யா.
சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தெலுங்கு பட உலகில் பழம்பெரும் நடிகர் நாகேஷ்வர ராவின் மரணம் அடைந்ததை கேள்விப்பட்டு நேன்று முன் தினம் தனது படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்.

அங்கிருந்து நேராக ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜூனா வீட்டிற்கு சென்று தனது ஆழந்த இரங்கலை தெரிவித்தார் சூர்யா.
அன்று நெடுநேரம் நாகார்ஜுனாவும் இருந்து பேசிவிட்டு சென்றார் சூர்யா.
Comments


Click it and Unblock the Notifications