twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிங்கம் 3-லும் நடிக்கணும்!- சூர்யா ஆசை

    By Shankar
    |

    சென்னை: நேரமும் சூழலும் அமைந்தால் சிங்கம் 3 படத்திலும் நடிக்க விரும்புகிறேன், என்றார் நடிகர் சூர்யா.

    'சிங்கம்-2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடந்தது.

    இசைத் தட்டை கன்னட நடிகர் சுதீப் வெளியிட்டார்.

    இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசுகையில், "சிங்கம்-2ஐ உருவாக்க நாங்கள் 8 மாதங்கள் உழைத்துள்ளோம். அடுத்த பாகத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு நேரம் ஒத்துழைக்க வேண்டும்.

    இயக்குனர் ஹரிக்கு பொறுமையும், நேரமும் இருந்தால் சிங்கம்-3 படத்தில் நடிக்கவும் நான் விரும்புகிறேன். சிங்கம்-2ல் நடித்தபோது ஏற்பட்ட ஆர்வமும் உற்சாகமும் சிங்கம்-3லும் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது.

    இயக்குனர் ஹரி அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். நேரம் ஒத்துழைத்தால் சிங்கம்-3ல் நாங்கள் மீண்டும் ஒன்றாக இணைவோம்," என்றார்.

    இயக்குநர் ஹரி பேசுகையில், "சிங்கம் படத்தை எடுக்கும்போதே, சிங்கம் 2 படம் குறித்த ஐடியா இருந்தது. சிங்கம் 3 உருவாக்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

    சூர்யாவுடன் அனுஷ்கா ஷெட்டி, ஹன்சிகா மோட்வானி, நாசர், விஜயகுமார், சந்தானம், விவேக், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சிங்கம்-2' வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

    English summary
    Actor Surya says that he would like to play in Singam part 3 too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X