Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
சிங்கம் 3-லும் நடிக்கணும்!- சூர்யா ஆசை
சென்னை: நேரமும் சூழலும் அமைந்தால் சிங்கம் 3 படத்திலும் நடிக்க விரும்புகிறேன், என்றார் நடிகர் சூர்யா.
'சிங்கம்-2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடந்தது.
இசைத் தட்டை கன்னட நடிகர் சுதீப் வெளியிட்டார்.
இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசுகையில், "சிங்கம்-2ஐ உருவாக்க நாங்கள் 8 மாதங்கள் உழைத்துள்ளோம். அடுத்த பாகத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு நேரம் ஒத்துழைக்க வேண்டும்.
இயக்குனர் ஹரிக்கு பொறுமையும், நேரமும் இருந்தால் சிங்கம்-3 படத்தில் நடிக்கவும் நான் விரும்புகிறேன். சிங்கம்-2ல் நடித்தபோது ஏற்பட்ட ஆர்வமும் உற்சாகமும் சிங்கம்-3லும் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ஹரி அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். நேரம் ஒத்துழைத்தால் சிங்கம்-3ல் நாங்கள் மீண்டும் ஒன்றாக இணைவோம்," என்றார்.
இயக்குநர் ஹரி பேசுகையில், "சிங்கம் படத்தை எடுக்கும்போதே, சிங்கம் 2 படம் குறித்த ஐடியா இருந்தது. சிங்கம் 3 உருவாக்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.
சூர்யாவுடன் அனுஷ்கா ஷெட்டி, ஹன்சிகா மோட்வானி, நாசர், விஜயகுமார், சந்தானம், விவேக், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சிங்கம்-2' வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.