Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'ஐயம் எ காம்ப்ளான் பாய்...'- தென் இந்தியாவின் விளம்பர தூதரானார் சூர்யா!
சென்னை: காம்ப்ளான் ஊட்டச்சத்து பானத்தின் தென் மண்டல விளம்பரத் தூதராக ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் சூர்யா.
மன உறுதிக்கு வலிமை தரும் புதிய காம்ப்ளான்' என்ற வசனத்தைப் பேசியபடி, தொலைக்காட்சிகளில் தோன்றுகிறார் சூர்யா.
இந்த புதிய விளம்பரம் கடந்த சில தினங்களாக ஒளிபரப்பாகிவருகிறது.
காம்ப்ளான் பானம் கடந்த 50 ஆண்டுகளாக விற்பனையில் முன்னணியில் உள்ளது.
முதல் முறையாக..
இந்த பொன்விழா ஆண்டையொட்டி, தங்கள் விளம்பரங்களுக்காக நடிகர் சூர்யா உள்பட மூன்று பிரபலங்களை ஒப்பந்தம் செய்துள்ளது. காம்ப்ளான் நிறுவனம் முதல் முறையாக தனது பான வகைகளின் விளம்பரத்திற்காக திரைப்பட நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்துள்ளது.
பெரிய வாய்ப்பு
இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, "லட்சக்கணக்கான குடும்பங்களின் அபிமான பெயர் காம்ப்ளான். புகழ்பெற்ற இந்த பிராண்டுடன் இணைந்திருப்பதை பொதுமக்களுடன் நான் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதற்கான மாபெரும் வாய்ப்பாக கருதுகிறேன். மேலும் இந்தியாவின் மிக நம்பகமான பிராண்டுகளுள் ஒன்றாக திகழும் காம்ப்ளான் உடன் இணைந்தது எனக்கு பெருமையளிக்கிறது," என்றார்.
அனைவரும் விரும்பும் நடிகர்
காம்ப்ளான் பிராண்டின் உரிமையாளரான ஹெய்ன்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீமா மோடி, "கஜினி, சிங்கம் போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களால் ரசிகர்கள் மத்தியில் சூர்யாவிற்கு பெரும் புகழ் கிடைத்துள்ளது.
அனைத்து தரப்பினரும் பெரிதும் விரும்பும் அவரை எங்களுடைய புதிய டி.வி. விளம்பரத்தில் கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தமைக்காக பெருமகிழ்ச்சி அடைகிறோம்," என்றார்.
நன்மதிப்பு
அருகிலிருந்த முழு நேர இயக்குனர் வி.மோகன், "தென் மாநிலங்களில் எமது பிராண்டின் நன்மதிப்பை மேலும் அதிகரிக்க சூர்யா உதவுவார்," என்று கூறினார்.