Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சூர்யா, கார்த்தியை வைத்து படம் எடுக்கும் பாண்டிராஜ்
சென்னை: நடிகர் சூர்யா-கார்த்தி இருவரும் சேர்ந்து நடிக்கும் திரைப்படத்தின் கதையைஇயக்குனர் பாண்டிராஜ் எழுதி வருகிறார்.
ஒரே குடும்பத்தில் சூர்யா, ஜோதிகா, கார்த்தி என மூன்றுபேர் நடிப்பு மற்றும் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கங்களிலும் முக்கிய பங்காற்றுகின்றனர்.
அண்ணன் சிங்கம், தம்பி சிறுத்தை என்று படத்திற்கு ஏற்றார்போல் பரபரப்பாக இருக்கும் இருவரையும் ஒரே படத்தில் இணைத்து ரசிகர்கள் பார்த்ததில்லை. ஆனால் விரைவில் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இருவரும் சேர்ந்து நடிக்க கதை கேட்டு வருகிறோம் என கார்த்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சிறுத்தையும், சிங்கத்தையும் ஒன்றிணைக்கப் போகிறார் பண்டிராஜ் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு சூர்யா, கார்த்தி இணைந்து நடிப்பதற்கான கதை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா இப்போது கே.வி.ஆனந்த் படத்தில் நடித்து வருகிறார்.
பிரிந்த சிம்பு-நயன்தாராவையே இது நம்ம ஆளு படத்தில் இணைத்து வைத்து அழகு பார்த்தவர் இயக்குனர் பாண்டிராஜ்.