Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
"நெகட்டிவ்" பாதைக்குத் திரும்பும் சூர்யா....!
சென்னை: சூர்யாவின் கைவசம் தற்போது அரைடஜன் படங்கள் இருந்தாலும் சாரின் மார்க்கெட் சர்ரென்று இறங்கிக் கிடக்கிறது தமிழ்நாட்டில், இதனால் எப்படியும் தனது மார்க்கெட்டை முன்னணிக்கு கொண்டுவரும் நோக்கத்தில் இருக்கிறார் சூர்யா.
தொடர்ந்து நல்ல பையனாக நடித்து வரும் சூர்யா இனிமேல் எல்லாம் கலந்த கேரக்டர்களில், நடித்தால் மட்டுமே மார்க்கெட்டில் தாக்குப் பிடிக்கலாம் என்று நினைக்கத் தொடங்கி விட்டார்.
தற்போது விக்ரம்குமாரின் 24 படத்தை முடித்திருக்கும் சூர்யா அடுத்து ஹரியின் இயக்கத்தில் சிங்கம் 3 யில் களமாட இருக்கிறார். இந்த 2 படங்களையும் முடித்து விட்டு அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார் சூர்யா.
தற்போது புதிதாக தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நெகட்டிவ் ரோல்களில் தனக்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வத்தை எடுத்துக் கூறி, நெகட்டிவ் கதைகளில் தான் நடிக்கத் தயார் என்று இயக்குனர்களிடம் தனது ஆசையை வெளிபடுத்தியிருக்கிறார்.
குறிப்பாக நடிகர் சத்யராஜ் ஏற்று நடித்த மாதிரியான கேரக்டர்களில் நடிக்க ஆசை கொண்டிருக்கிறார் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.