Don't Miss!
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திருட்டு வீடியோவை ஒழிக்கவும் இணைஞர்கள் திரண்டு வரணும்! - சூர்யா
சீமைக் கருவேல மரங்களை ஒழிப்பதற்கு முன்வந்ததைப் போல திருட்டு வீடியோவை ஒழிப்பதற்கும் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகர் சூர்யா நடித்த சிங்கம்-3 (சி3) திரைப்படம் நாளை (9-ந்தேதி) வெளியாகிறது. இதையொட்டி அப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சூர்யா சந்தித்து வருகிறார்.
நெல்லையில் ஒரு தியேட்டர் விசிட்டை முடித்த பிறகு சூர்யா பேசுகையில், "நான் எத்தனையோ படங்களில் நடித்தாலும் சிங்கம் படத்தின் துரைசிங்கம் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்கு காரணம் இந்த மண்தான். நெல்லை மக்கள் கடுமையான உழைப்பாளிகள். அவர்களது வாழ்க்கையைத்தான் சிங்கம் படத்தில் காட்டியுள்ளோம்.
தற்போது தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த பணியில் மாணவர்களும் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கருவேல மரங்களின் வேர்கள் நிலத்திற்குள் 20 அடி வரை சென்று நீரை உறிஞ்சுகிறது. அதனால் கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டும்.
கருவேல மரங்களின் வேர் போன்று திரைத்துறையிலும் திருட்டு சி.டி.க்கள் உள்ளன. அவற்றை ரசிகர்கள்தான் அகற்ற வேண்டும்.
முந்தைய படங்களைப் போல் சிங்கம்-3யிலும் காவல்துறையை பெருமைப்படுத்தியுள்ளோம்," என்றார்.