Don't Miss!
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திருட்டு வீடியோவை ஒழிக்கவும் இணைஞர்கள் திரண்டு வரணும்! - சூர்யா
சீமைக் கருவேல மரங்களை ஒழிப்பதற்கு முன்வந்ததைப் போல திருட்டு வீடியோவை ஒழிப்பதற்கும் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகர் சூர்யா நடித்த சிங்கம்-3 (சி3) திரைப்படம் நாளை (9-ந்தேதி) வெளியாகிறது. இதையொட்டி அப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சூர்யா சந்தித்து வருகிறார்.
நெல்லையில் ஒரு தியேட்டர் விசிட்டை முடித்த பிறகு சூர்யா பேசுகையில், "நான் எத்தனையோ படங்களில் நடித்தாலும் சிங்கம் படத்தின் துரைசிங்கம் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்கு காரணம் இந்த மண்தான். நெல்லை மக்கள் கடுமையான உழைப்பாளிகள். அவர்களது வாழ்க்கையைத்தான் சிங்கம் படத்தில் காட்டியுள்ளோம்.
தற்போது தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த பணியில் மாணவர்களும் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கருவேல மரங்களின் வேர்கள் நிலத்திற்குள் 20 அடி வரை சென்று நீரை உறிஞ்சுகிறது. அதனால் கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டும்.
கருவேல மரங்களின் வேர் போன்று திரைத்துறையிலும் திருட்டு சி.டி.க்கள் உள்ளன. அவற்றை ரசிகர்கள்தான் அகற்ற வேண்டும்.
முந்தைய படங்களைப் போல் சிங்கம்-3யிலும் காவல்துறையை பெருமைப்படுத்தியுள்ளோம்," என்றார்.