Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோ .. ஹீரோ ..
ஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்க உள்ள அடுத்த படத்தில் சூர்யாவும்- ஜோதிகாவும் மீண்டும் இணைகின்றனர். படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை.
இருவருக்கும் இடையே கிசுகிசு படு உச்சத்தில் இருந்தபோது காக்க.. காக்கவில் இணைந்து நடித்தனர்.
அதில் இருவரும் ஆதர்ஷ தம்பதிகளாகவே வாழ்ந்து காட்டினர். மிக நெருக்கமாகவும் நடித்தனர்.
இந் நிலையில் சமீபத்தில் ஜோதிகாவுடன் காதல் எல்லாம் இல்லை, வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்வேன் என்று சூர்யா வெளிப்படையாகவே பேட்டி தந்தார்.
மேலும் சூர்யா குறித்து கிரண் ஏதோ கிண்ட, ஜோதிகாவும் கிரணும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இந்தியில் கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டு சண்டை போட்டுவிட்டுத் திரும்பியதும் செய்தியானது.
கொஞ்ச காலமாக படங்களை ஒதுக்கி வந்த ஜோதிகாவும் சமீப காலமாக நிறைய படங்களை ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.
இதனால் சூர்யா- ஜோதிகா இடையே காதல் முறிவு என்ற செய்திகள் கோடம்பாக்கத்தில் கசிய ஆரம்பித்துள்ள நிலையில் மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர்.
ஏ.வி.எம். ஸ்டுடியோவிலேயே இந்தப் படத்திற்கான பூஜை சில நாட்களுக்கு முன் போடப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளியான குஞ்னி கூனன் என்ற படத்தைத் தழுவியே இந்தப் படத்தை எடுக்கப் போகிறார்களாம்.
மலையாளத்தில் அதை இயக்கிய சசிசங்கர் தான் தமிழிலும் இயக்குகிறார். இசை யுவன்சங்கர் ராஜா. ஏ.வி.எம். நிறுவனத்துக்கு இது 166வது படமாம்.