Don't Miss!
- News தங்கமான தங்கைக்கு திருமண பரிசு கொடுக்க ஆசைப்பட்ட அண்ணன்.. அடித்தே கொன்ற மனைவி
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அஜீத்துக்கு சூர்யா சப்போர்ட்! அஜீத்தைத் தாண்டி ஏகப்பட்ட ஹீரோக்கள் வந்து விட்டனர், வளர்ந்து விட்டனர், விஸ்வரூபம் எடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் கோலிவுட்டில் அஜீத்தின் மார்க்கெட் இப்போது அவ்வளவு செல்வாக்காக இல்லை. ஆனால் அஜீத்துக்கு ஆதரவாக ஒரு குரல், அதுவும் முன்னணி நடிகராக உள்ள ஒருவர் படு ஸ்டிராங்காக குரல்கொடுத்துள்ளார். அது பேரழகன் சூர்யா.ரஜினி-கமல் வரிசைக்குப் பிறகு யார் என்பது தான் இப்போது கோலிவுட்டில் எழுப்பப்படும் ஒரே கேள்வி. ரஜினி இடத்தைவிஜய்யும், கமல் இடத்தை விக்ரமும் பிடித்து விட்டதாகவே பரவலாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் விக்ரமுடன் போட்டி போடும் நபராக சூர்யா உருவாகி உள்ளார். இதனால் இந்த சூப்பர் நடிகர்களின்ஸ்லாட்டுக்கான போட்டி இன்னும் முழுமை பெறாமல் மேலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.சமீபத்தில் சூர்யாவைப் பேட்டி காணச் சென்ற ஒரு நிருபர், ரஜினி, கமலுக்குப் பிறகு விஜய்-விக்ரம் என்று கூறுகிறார்கள்.அதேபோல சூர்யாவுடன் எந்த நடிகரை வைக்கலாம் என்று கேட்டுள்ளார்.அதற்கு சூர்யா, நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் அஜீத் என்று ஒரு நடிகர் இருக்கிறாரே, அவரை எப்படி மறந்தீர்கள்?அவரது சகாப்தம் இன்னும் முடியவில்லை, தோல்வியும் அடையவில்லை. நிச்சயம் விஸ்வரூபம் எடுத்து வருவார். அவ்வளவு சீக்கிரம் அவரைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். அவரும் வந்து, கலக்கஆரம்பித்த பின்னர் தான் இந்த ஒப்புமைப்படுத்தும் கேள்விகளுக்கெல்லாம் சரியான விடை கிடைக்க முடியும். சி அதுவரை பொருத்திருங்களேன் என்று ஒரே போடாக போட்டாராம் சூர்யா.முன்னணியில் உள்ள ஹீரோ சக நடிகரை இப்படித் தூக்கி வைத்துப் பேசுவது கோலிவுட்டில் கனவிலும் கூட நடக்காத விஷயம்.ஆனால் தான் ஒரு ஜென்டில்மேன் என்பதை சூர்யா நிரூபித்துள்ளார்.சூர்யாவைப் பத்தி இன்னொரு விஷயம், கஜினி படத்தில் அவர் சூப்பர் கெட்டப்பில் வருகிறாராம். மொட்டை அடித்து உடலைமுறுக்கேற்றி, முற்றிலும் கலக்கலான கெட்டப்பில் தோன்றுகிறாராம் சூர்யா. கஜினி, சூர்யாவுக்கு இன்னும் ஒரு சிறந்த படமாகஅமையும் என்கிறார்கள்.அஜீத் குறித்தும் ஒரு துக்கடா. பாதியில் நின்று போன காட்பாதர் மீண்டும் வளர ஆரம்பித்துள்ளதாம். தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ்சக்கரவர்த்திக்கும், அஜீத்திற்கும் இடையே இருந்த லடாயை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தலையிட்டு சமரசம் செய்துவைத்துள்ளாராம். அத்தோடு நில்லாமல், சக்கரவர்த்திக்கு ரவிக்குமார் பண உதவியும் செய்து படத்தை முடிக்க உதவியுள்ளாராம்.இதனால் பாலாவின் நான் கடவுள் படத்திற்காக வளர்த்திருந்த நீண்ட தலைமுடியை, பாலாவின் அனுமதியுடன் கட் செய்துவிட்டாராம் அஜீத். காட்பாதரை முடித்து விட்டு ரிலாக்ஸ் ஆக வாருங்கள் என்று பாலாவும் பெருந்தன்மையுடன் அஜீத்தை,ரவிக்குமாரிடம் அனுப்பி வைத்துள்ளாராம்.ஸோ, காட்பாதர் மீண்டும் வளர ஆரம்பித்துள்ளது. தீபாவளிக்கு படம் கண்டிப்பாக வந்து விடும் என்று அஜீத் தரப்புநம்பிக்கையுடன் உள்ளது.
அஜீத்தைத் தாண்டி ஏகப்பட்ட ஹீரோக்கள் வந்து விட்டனர், வளர்ந்து விட்டனர், விஸ்வரூபம் எடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் கோலிவுட்டில் அஜீத்தின் மார்க்கெட் இப்போது அவ்வளவு செல்வாக்காக இல்லை.
ஆனால் அஜீத்துக்கு ஆதரவாக ஒரு குரல், அதுவும் முன்னணி நடிகராக உள்ள ஒருவர் படு ஸ்டிராங்காக குரல்கொடுத்துள்ளார். அது பேரழகன் சூர்யா.
ரஜினி-கமல் வரிசைக்குப் பிறகு யார் என்பது தான் இப்போது கோலிவுட்டில் எழுப்பப்படும் ஒரே கேள்வி. ரஜினி இடத்தைவிஜய்யும், கமல் இடத்தை விக்ரமும் பிடித்து விட்டதாகவே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இருப்பினும் விக்ரமுடன் போட்டி போடும் நபராக சூர்யா உருவாகி உள்ளார். இதனால் இந்த சூப்பர் நடிகர்களின்ஸ்லாட்டுக்கான போட்டி இன்னும் முழுமை பெறாமல் மேலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில் சூர்யாவைப் பேட்டி காணச் சென்ற ஒரு நிருபர், ரஜினி, கமலுக்குப் பிறகு விஜய்-விக்ரம் என்று கூறுகிறார்கள்.அதேபோல சூர்யாவுடன் எந்த நடிகரை வைக்கலாம் என்று கேட்டுள்ளார்.
அதற்கு சூர்யா, நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் அஜீத் என்று ஒரு நடிகர் இருக்கிறாரே, அவரை எப்படி மறந்தீர்கள்?அவரது சகாப்தம் இன்னும் முடியவில்லை, தோல்வியும் அடையவில்லை.
நிச்சயம் விஸ்வரூபம் எடுத்து வருவார். அவ்வளவு சீக்கிரம் அவரைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். அவரும் வந்து, கலக்கஆரம்பித்த பின்னர் தான் இந்த ஒப்புமைப்படுத்தும் கேள்விகளுக்கெல்லாம் சரியான விடை கிடைக்க முடியும். சி
அதுவரை பொருத்திருங்களேன் என்று ஒரே போடாக போட்டாராம் சூர்யா.
முன்னணியில் உள்ள ஹீரோ சக நடிகரை இப்படித் தூக்கி வைத்துப் பேசுவது கோலிவுட்டில் கனவிலும் கூட நடக்காத விஷயம்.ஆனால் தான் ஒரு ஜென்டில்மேன் என்பதை சூர்யா நிரூபித்துள்ளார்.
சூர்யாவைப் பத்தி இன்னொரு விஷயம், கஜினி படத்தில் அவர் சூப்பர் கெட்டப்பில் வருகிறாராம். மொட்டை அடித்து உடலைமுறுக்கேற்றி, முற்றிலும் கலக்கலான கெட்டப்பில் தோன்றுகிறாராம் சூர்யா. கஜினி, சூர்யாவுக்கு இன்னும் ஒரு சிறந்த படமாகஅமையும் என்கிறார்கள்.
அஜீத் குறித்தும் ஒரு துக்கடா. பாதியில் நின்று போன காட்பாதர் மீண்டும் வளர ஆரம்பித்துள்ளதாம். தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ்சக்கரவர்த்திக்கும், அஜீத்திற்கும் இடையே இருந்த லடாயை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தலையிட்டு சமரசம் செய்துவைத்துள்ளாராம்.
அத்தோடு நில்லாமல், சக்கரவர்த்திக்கு ரவிக்குமார் பண உதவியும் செய்து படத்தை முடிக்க உதவியுள்ளாராம்.
இதனால் பாலாவின் நான் கடவுள் படத்திற்காக வளர்த்திருந்த நீண்ட தலைமுடியை, பாலாவின் அனுமதியுடன் கட் செய்துவிட்டாராம் அஜீத். காட்பாதரை முடித்து விட்டு ரிலாக்ஸ் ஆக வாருங்கள் என்று பாலாவும் பெருந்தன்மையுடன் அஜீத்தை,ரவிக்குமாரிடம் அனுப்பி வைத்துள்ளாராம்.
ஸோ, காட்பாதர் மீண்டும் வளர ஆரம்பித்துள்ளது. தீபாவளிக்கு படம் கண்டிப்பாக வந்து விடும் என்று அஜீத் தரப்புநம்பிக்கையுடன் உள்ளது.