கள்ளக்காதலருடன் கையும், களவுமாக சிக்கிய ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி
மும்பை:பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் நடிகர் அர்ஜுன் ராம்பலுடன் காபி ஷாப்பிற்கு சென்று சுற்றியுள்ளவர்களை மறந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் பற்றி பலவாரியாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. சூசனுக்கும் ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையான நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த கள்ளத்தொடர்பால் தான் சூசன் ரித்திக்கை பிரிந்து சென்றதாகவும் பேசுகிறார்கள். சூசனால் அர்ஜுன் ராம்பலுக்கும் அவரது மனைவி மெஹர் ஜெசியாவுக்கும் இடையே பிரச்சனை என்றும், அவர்கள் விவாகரத்து பெறக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் சூசனும், அர்ஜுனும் மும்பையில் உள்ள காபி ஷாப் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சுற்றி இருப்பவர்களை மறந்துவிட்டு பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். நேரம் ஆக ஆக கடையில் கூட்டம் கூடியுள்ளது.
கூட்டத்தை கவனித்த அவர்கள் இனியும் இங்கிருந்தால் நன்றாக இருக்காது என்று அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர்.


Click it and Unblock the Notifications











