Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
கள்ளக்காதலருடன் கையும், களவுமாக சிக்கிய ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி
மும்பை:பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் நடிகர் அர்ஜுன் ராம்பலுடன் காபி ஷாப்பிற்கு சென்று சுற்றியுள்ளவர்களை மறந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் பற்றி பலவாரியாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. சூசனுக்கும் ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையான நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த கள்ளத்தொடர்பால் தான் சூசன் ரித்திக்கை பிரிந்து சென்றதாகவும் பேசுகிறார்கள். சூசனால் அர்ஜுன் ராம்பலுக்கும் அவரது மனைவி மெஹர் ஜெசியாவுக்கும் இடையே பிரச்சனை என்றும், அவர்கள் விவாகரத்து பெறக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் சூசனும், அர்ஜுனும் மும்பையில் உள்ள காபி ஷாப் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சுற்றி இருப்பவர்களை மறந்துவிட்டு பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். நேரம் ஆக ஆக கடையில் கூட்டம் கூடியுள்ளது.
கூட்டத்தை கவனித்த அவர்கள் இனியும் இங்கிருந்தால் நன்றாக இருக்காது என்று அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர்.