Don't Miss!
- News கொய்யாப்பழத்தை பார்த்ததுமே.. பாய்ந்து வந்த 2 ஆடுகள்.. பின்னாடியே ஓடிசென்ற முருகன்.. திணறிய தென்காசி
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முதல்வராவேன் என்று குரல் கொடுக்காத ஒரே தலைவன் நான்தான்-டி.ராஜேந்தர்
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, தேர்தலில் மின்னனு வாக்குபதிவு இயந்திரத்தை தவிர்த்து வாக்கு சீட்டு மூலம் ஓட்டு போடும் நிலைக்கு நாடு திரும்ப வேண்டும்.
லட்சிய திமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும். 25 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். நாளைய முதல்வர் என குரல் கொடுக்காத ஓரே அரசியல் கட்சி தலைவர் நான்தான். ஆனால் மக்களுக்கு குரல் கொடுப்பதில் முதல்வராக இருக்கிறேன். பணபலம் இல்லை என்றாலும் மனபலத்துடன் கட்சி நடத்துகிறேன்.
லட்சிய திமுக அங்கீகரக்கப்பட்ட கட்சியாக பதிவு செய்ய 9 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். எனவே வருகிற தேர்தலில் 20 முதல் 30 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்வோம்.
காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைக்கிறது என்பதை பொறுத்துதான் கூட்டணி முடிவு செய்யப்படும். காங்கிரஸ் இல்லாத கூட்டணிக்கு நாங்கள் அழைக்கப்படுவோம் என்றார் அவர்.