Don't Miss!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பழம்பெரும் நடிகர் பி.ஜே.சர்மா காலமானார்... ஜெமினிக்கு குரல் கொடுத்தவர் !
ஹைதராபாத்: பழம்பெரும் நடிகரும், பின்னணிக் குரல் கலைஞருமான பி.ஜே.சர்மா மாரடைப்பால் ஹைதராபாத்தில் காலமானார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், அமிதாப்பச்சன், திலீப்குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தவர் பழம் பெரும் நடிகர் பி.ஜே.சர்மா (82). தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் பி.ஜே.சர்மா பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இவர் தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். ஜெமினி கணேசனுக்குப் பல படங்களில் பின்னணிக் குரல் கொடுத்தது பி.ஜே.சர்மா தான்.
இந்நிலையில், சமீபகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த சர்மா, நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார்.
சர்மாவின் மறைவிற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், பி.ஜே.சர்மாவின் உடலுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், தெலுங்கு பட உலகினர் ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள சாய்குமார் சர்மாவின் மூத்தமகன் என்பது குறிப்பிடத்தக்கது. சாய்குமாரின் மகன் ஆதியும் தற்போது நாயகனாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.