Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
5 ஆண்டுகளுக்கு பிறகு கெட்அப்பை மாற்றி அஜித்...இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோ
சென்னை : அஜித், மிகவும் அரிதாகவே பொது இடங்களுக்கு வருவார். அப்படி அவர் வரும் போது, எடுக்கப்படும் போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டிங் ஆகும். இப்படியாக நிகழ்வு ஒன்று இன்று காலை நடந்தது.
அஜித் இன்று காலை சென்னை போஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திடீரென வந்தார். தனிப்பட்ட விஷயமாக அவர் வந்ததாக கூறப்படுகிறது. காவலர்கள், அதிகாரிகள் சூழ வந்த போதும், அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அஜித் மொட்டை தலையுடன் வந்தது தான். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் வலிமை படத்தில் இன்னும் ஒரு சண்டை காட்சி மீதம் உள்ளது என படக்குழு கூறி வரும் நிலையில் அஜித், தனது கெட்அப்பை மாற்றி உள்ளார்.
அப்படியானால் வலிமை படத்தில் அஜீத் மொட்டை தலையுடன் வரும் காட்சிகள் இடம்பெற உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படியோ வலிமை படத்தின் அடுத்த அப்டேட்டை அஜித்தே வெளிப்படுத்தி உள்ளார்.
இதற்கு முன் வேதாளம் படத்திற்காக 5 ஆண்டுகளுக்கு முன் அஜித் மொட்டை தலை கெட்டப்புடன் இருந்தார். இப்போது மீண்டும் அதே கெட்அப்பில் வந்திருப்பதால் மேலும் சில காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க டைரக்டர் வினோத் திட்டமிட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
யாரும் எதிர்பாராத விதமாக நடந்த அஜித்தின் வருகையால் கமிஷனர் அலுவலகமே பரபரப்பானது. ஆனால் அவரது ரசிகர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாகவே இருந்திருக்கும்.