Don't Miss!
- News ஆச்சரியம்.. உடனே வெளியே போய் பாருங்க.. 12.17 முதல் 12.23 வரை நிழல் தரையில் விழாது
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாசத்துக்கு தத்துப்புள்ள தளபதிடா.. கொரோனா நிதி.. ரசிகர்களுக்கும் வாரி கொடுத்துருக்காரு விஜய்!
சென்னை: கொரோனா நிதியாக 1.30 கோடி ரூபாயை நடிகர் விஜய் சமீபத்தில் வழங்கிய நிலையில், தனது ரசிகர்களுக்கும் விஜய் நிதியுதவி செய்த விசயம் வைரலாகி வருகிறது.
Recommended Video
வரும் மே 3ம் தேதியுடன் இந்த லாக்டவுன் நிறுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருந்தாலும், கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் கட்டுக்குள் வருவதாகவே தெரியவில்லை.
குதறிப்போட்ட கொரோனா வைரஸ்.. தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா தள்ளி வைப்பு.. இயக்குனர் தகவல்!
நீட்டிக்கப்படுமா
தமிழ் நாட்டில் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாகவே சென்னை மாறி இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே போவதால் சாமானியர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகி போயுள்ளது. மேலும், சில வாரங்களுக்கு லாக் டவுன் நீட்டிக்கப்பட்டால் பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும்.
பிரபலங்கள் நிதியுதவி
கொரோனாவால் பல லட்சம் குடும்பங்கள் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருக்கின்றன. பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் தாராளமாக கொரோனா நிதி அளித்தால், அவர்களின் பசியாற அரசு நடவடிக்கை எடுக்க அந்த பணம் உதவியாக இருக்கும் என்பதால், பல பிரபலங்களும் தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றனர்.
விஜய் நிதியுதவி
ரஜினிகாந்த் முதல் ஹரிஷ் கல்யாண் வரை பல நடிகர்களும் கொரோனா நிதி அளித்த நிலையில், கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் நடிகர்களான அஜித், விஜய் அமைதி காத்து வந்ததாக செய்திகள் வெளியாகின. நடிகர் அஜித் கொரோனா நிதியாக 1.25 கோடி அறிவித்தார். அதன் பின்னர் நடிகர் விஜய் 1.30 கோடி நிதியை மத்திய, மாநில அரசுகளுக்கும், ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி அரசுகளுக்கும் என பிரித்துக் கொடுத்தார்.
ரசிகர்களுக்கும்
இந்நிலையில், நடிகர் விஜய் கொரோனா பாதிப்பால் வேலை இழந்து தவிக்கும் தனது ரசிகர்களுக்கும் நிவாரண நிதி வழங்கியுள்ள விசயம் வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு ரசிகர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 50 லட்சம் ரூபாய் வரை தனது ரசிகர்களுக்கும் நிவாரண நிதி வழங்கியுள்ள நடிகர் விஜய்யின் தாராள மனசை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ரசிகர்கள் நன்றி
சினிமா தொழிலாளர்கள், பிரதமர் நிவாரண நிதி, மாநில அரசுகளுக்கு நிவாரண நிதி என பிரித்துக் கொடுத்த நடிகர் விஜய், தனது ரசிகர்கள் துயர் துடைக்கும் வகையில், ரூ. 50 லட்சம் ரூபாய் அளவுக்கு உதவி செய்துள்ள நிலையில், அந்த உதவியை பெற்ற ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும், தளபதி விஜய்க்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து பதிவுகளும், வள்ளல் விஜய் என்ற ஹாஷ்டேக்கையும் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பான் இந்தியா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் ஏப்ரல் 9ம் தேதி ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக நடிகர் விஜய்யின் பிறந்த நாள் அன்று மாஸ்டர் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.