Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வரலாற்றுப் படத்தில் நடிக்கவே ஆசை 'மனந்திறந்த' ஜெயம் ரவி
சென்னை: வரலாற்றுப் படத்தில் இதுவரை நடிக்கவில்லை எனினும் அந்த மாதிரியான படங்களில் நடிக்கவே ஆசை என்று கூறியிருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.
பாகுபலி, பாஜிரோ மஸ்தானி ஆகிய படங்களின் வெற்றியால் திரையுலகினரின் கவனம் தற்போது சரித்திரப் படங்களின் மேல் திரும்பியிருக்கிறது.
தமிழில் ஜனநாதன், விஷ்ணுவர்த்தன் ஆகியோர் சரித்திரப் படங்களை இயக்கவிருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.மேலும் நடிகர்களின் கவனமும் தற்போது வரலாற்றுப் படங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது.
இந்நிலையில் நேற்று தனது ரசிகர்களுடன் உரையாடிய ஜெயம் ரவி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு சரித்திரப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சுப்பிரமணியம் சங்கர் என்ற ரசிகர் நீங்கள் நடிக்க ஆசைப்பட்டு இதுவரை முடியாமல் போன கதாபாத்திரம்/படம் எது? என்று கேட்டிருந்தார்.
@actor_jayamravi : Hi Sir..Could you mention any role which you thought it to do,but not yet did?
— Subramaniam Sankar (@raghussun) January 6, 2016
இதற்கு ஒரே வரியில் வரலாற்றுப் படம் என்று ஜெயம் ரவி பதில் கூறியிருக்கிறார்.இதன் மூலம் வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஜெயம் ரவியின் ஆசை தற்போது வெளிப்பட்டிருக்கிறது.
இதே போல மற்றொரு ரசிகர் பேராண்மை, தனி ஒருவன் 2 படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படமெது? என்று கேட்டிருந்தார்.
இதற்கு வலது கண், இடது கண் ரெண்டுமே நமக்கு ரொம்ப முக்கியம் அதே போல இந்த ரெண்டு படங்களுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று பதிலளித்து இருக்கிறார்.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் மிருதன் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 12ம் தேதி உலகெங்கும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!