Don't Miss!
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திறமை... கடின உழைப்பு... தன்னம்பிக்கை... இதுதாங்க நல்ல நடிகருக்குத் தேவை: தனுஷ்
சென்னை: நல்ல நடிகராவதற்குரிய கட்டாயத் தேவைகளாக திறமை, கடின உழைப்பு மற்றும்தன்னம்பிக்கை போன்றவை அவசியம் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.
தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் ராஞ்ச்னாவும், தமிழில் அம்பிகாபதியும், மரியானும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. வெற்றி நாயகனான தனுஷ் தொடர்ந்து தனது பட அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் மலையால சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார் நடிகர் தனுஷ். அதில் அவர் தெரிவித்ததாவது...
3 தேவைகள்...
நல்ல நடிகர் எனப் பெயர் எடுப்பதற்கு ஒரு நடிகருக்கு திறமை, கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை கட்டாயம் அவசியம்.
திறமையும், வெற்றியும்...
எந்த நடிகருக்கும் முதலில் திறமை என்ற ஒன்று இருக்க வேண்டும். இரண்டாவதாக அதைப் பயன்படுத்தி தனது கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். கடைசியாக தான் வெற்றி பெறுவோம் என நம்பவேண்சும்.
வெற்றிக்கான பாதை...
அந்த தன்னம்பிக்கை தான் வெற்றிக்கான அடித்தளம். இது மூன்றும் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாரும் எளிதில் வெற்றி அடைந்து விடலாம் எனத் தெரிவித்துள்ளார்.
என் படம் வரலாறாக வேண்டும்...
மேலும், இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகள் கழித்து மக்கள் சிறந்த இந்தியப் படங்கள் என சிலவற்றைப் பேசும் போது, அதில் என்னுடைய படம் ஒன்றாவது கட்டாயம் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் ஆசை எனக் கூறியுள்ளார்.