Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி.. கனோஜ் தொகுதியில் நாளை மனுத்தாக்கல்.. பின்னணியில் 2 காரணம்!
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தபால் துறை ஏற்பாடு: ரஜினிக்கு இ போஸ்டில் குவிந்த வாழ்த்துகள்!
நேற்று டிசம்பர் 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்திருந்த இ போஸ்ட் மூலம் மட்டுமே பல ஆயிரம் வாழ்த்துக் கடிதங்கள் குவிந்தன.
ரஜினியின் பிறந்த நாளை உலகமே நேற்று கொண்டாடியது. நாட்டின் பிரதமர் தொடங்கி, சாமானிய ரசிகன் வரை அவரை அனைவருமே வாழ்த்தி மகிழ்ந்தனர். உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் தொலைக்காட்சிகள் மூலமாகவும் இணையதளங்கள் வாயிலாகவும் வாழ்த்தினர்.
ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற இ போஸ்ட் முறையை இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியது. நேற்று சென்னை அபிராமபுரம், கோபாலபுரம் தபால் நிலையங்களில் இபோஸ்ட் மூலம் பல ஆயிரம் வாழ்த்துக் கடிதங்கள் ரஜினிக்குக் குவிந்தன. இதனை அஞ்சல் துறை ஊழியர்கள் ரஜினி வீட்டில் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
இதுகுறித்து சென்னை மண்டல தபால் துறை அலுவலர் மெர்வின் அலெக்சாண்டர் கூறுகையில், " பொது மக்களைக் கவர அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில்
ஒன்று இ போஸ்ட். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூற விரும்புவோருக்காக இந்த சேவையை அறிமுகப்படுத்தினோம். பெரிய வெற்றி பெற்றுள்ளது," என்றார்.