Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தம்மடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்
சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று கும்பகோணம் வந்தார். அவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் 50-வது நாள் விழாவில் பங்கேற்றார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "சினிமாவில் சீர்திருந்த படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன். புகைப் பிடிக்கும் காட்சி, புகையிலை பயன்படுத்தும் காட்சியில் நடிக்க மாட்டேன். குடிப்பது போன்ற காட்சிகளைக் கூட தவிர்க்க முயற்சிக்கிறேன்.
வித்தியாசமான கதைகளுக்காக காத்திருக்கிறேன். ஜனரஞ்சகமான, காமெடி படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் எனது நடிப்பில் குறைகள் இருக்கலாம். அதை என்னிடம் தாராளமாக சொல்லுங்கள். எனக்கேற்ற மாதிரி வித்தியாசமான ஆக்ஷன் படங்களிலும் நடிப்பேன். அட வில்லன் ரோலாக வந்தாலும் வித்தியாசமாக இருந்தால் நடிக்க ஆசை.
எனக்கு எல்லா இயக்குநர்களும் பிடிக்கும். ஆனாலும் ராஜேஷ் படத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். சந்தானத்துடன் கூட்டணி மீண்டும் தொடரும். வடிவேல் நல்ல நண்பர். அவருடனும் சேர்ந்த நடிக்க விரும்புகிறேன்," என்றார்.
முன்னதாக நிகழ்ச்சியில் தஞ்சை, கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.
தமிழில் முதல் இடத்தைப் பிடித்த 6 மாணவ - மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.