Don't Miss!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் ஷாருக் கான் தடுக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்ட அமெரிக்க தூதர்!
டெல்லி: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் ஷாரூக்கான் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒவ்வொரு முறை அமெரிக்காவுக்குப் போகும் போதெல்லாம் அங்குள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி சில மணி நேரம் காக்க வைத்து அனுப்புவது வழக்கமாகிவிட்டது.
கடந்த 2009-ம் ஆண்டு அவர் அமெரிக்காவுக்கு சென்றபோது நியூ ஜெர்சி விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அடுத்து கடந்த 2012-ம் ஆண்டும் நியூயார்க் விமான நிலையத்தில் குடியுரிமைத் துறை அதிகாரிகள் அவரை 2 மணிநேரம் காக்கவைத்து, தீவிர விசாரணைக்கு பின்னர் அனுமதித்தனர்.
இந்நிலையில், தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தன்னை குடியுரிமைத்துறை அதிகாரிகள் மீண்டும் காக்க வைத்த சம்பவத்தை ஷாருக்கான் தனது ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தினார்.
'உலகம் இன்று இருக்கும் நிலையில் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை நான் முழுமையாக புரிந்து வைத்துள்ளேன். இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மதிப்பும் அளிக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறை அமெரிக்காவுக்கு வரும்போதும் இங்குள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகளால் காக்க வைக்கப்படுவது வேதனைக்குரியது.
ஆனால், இந்தமுறை காத்திருந்த நேரத்தில் சில போக்கிமோன்களை பிடிக்க முடிந்தது,' என வேதனையாகக் கிண்டலடித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா சென்ற பாலிவுட் நடிகர் ஷாருக் கானை லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் நிறுத்திவைத்த சம்பவத்துக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தலைமை தூதர் ரிச்சர்ட் வர்மா மன்னிப்பு கேட்டுள்ளார்.
தனது விவகாரத்தில் அக்கறை எடுத்து கொண்டமைக்காக ரிச்சர்ட் வர்மாவுக்கு ஷாருக் கான் நன்றி தெரிவித்துள்ளார்.