Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
வடிவேலு-சுந்தர்.சி டர்ர்?
வடிவேலுவுக்கும், சுந்தர்.சிக்கும் இடையே புகைச்சலாகி விட்டதாம். இருவரும் இணைந்து இனி கலக்குவது சந்தேகம் என்கிறார்கள்.
சுந்தர்.சியின் ஆரம்ப காலப் படங்களில் காமெடியில் கலக்கி வந்தவர் கவுண்டமணி. அவரது காலம் முடிய, அப்படியே வந்து ஒட்டிக் கொண்டவர்வடிவேலு. சுந்தர்.சி., வடிவேலு கூட்டணியில் உருவான அத்தனை படங்களுமே மெகா ஹிட் தமாகா!அதிலும் வின்னர் படத்தில் வடிவேலுவின் அலம்பல் எப்போது நினைத்தாலும் வாய் வலிக்க சிரிக்க வைக்கும். தொடர்ந்து தலைநகரம், கிரி, இரண்டுஎன சுந்தர்.சியின் படங்களில் தொடர்ந்து சிரிக்க வைத்தார் வடிவேலு.
சுந்தர்.சியின் இயக்கத் திறமையை விட வடிவேலுவின் காமெடிதான் சுந்தர் படத்தை தூக்கி நிறுத்தியது எனலாம்.
இப்போது இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு விட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது. எல்லாம் இரண்டு படத்தால் வந்த வினையாம். இரண்டு படத்தில்வடிவேலுவுடன், லொள்ளு சபா புகழ் சந்தானத்தையும் சேர்த்து நடிக்க வைத்திருந்தார் சுந்தர்.சி.
வடிவேலுவுக்கு இணையாக சந்தானத்துக்கும் காட்சிகள் வைத்திருந்தார். இது வடிவுேவை இரிட்டேட் செய்து விட்டதாம். எனக்குத் தெரியாமல்சந்தானத்தை நடிக்க வைத்து விட்டார் சுந்தர்.சி. இது என்னை அவமானப்படுத்தியதைப் போல உள்ளது. எனவே இனிமேல் சுந்தர்.சி. படங்களில்நான் நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம் வடிவேலு.
சுந்தர்.சி. தரப்போ வேறு மாதிரியாக இதற்கு விளக்கம் தருகிறது. சந்தானம் வரும் காட்சிகள் பிளாஷ்பேக் காட்சிகள். அதிலும் வடிவேலுவையேஎப்படி நடிக்க முடியும். இதை வடிவேலு புரியாமல் போனது வருத்தமாக உள்ளதாக சுந்தர்.சி தனக்கு நெருக்கமானவர்களிடம் முணகி வருகிறாராம்.
சண்டையை பெரிசாக்கி காமெடி கீமடி பண்ணிடாதீங்கப்பு!