Don't Miss!
- News ஆரத்திக்கு பணம் கொடுத்த அண்ணாமலை? தீயாகப் பரவி வரும் வீடியோ.. விசாரணைக்கு கோவை ஆட்சியர் உத்தரவு!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
வாக்களித்தார் 'தெனாலிராமன்' வடிவேலு!
சென்னை: கடந்த சட்டமன்றத் தேர்தலில் தன் பிரச்சாரத்தால் கலக்கிய வடிவேலு, இந்த தேர்தலின்போது ஒரு வாக்காளராக மட்டும் தன் கடமையைச் செய்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் வடிவேலு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. காரணம் அவர் திமுகவுக்கு பிரச்சார பீரங்கியாக நின்று வாக்கு சேகரித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தார்.
ஆனால் தேர்தலில் திமுக தோற்றுப் போக, வடிவேலு சினிமாவில் ஓரங்கட்டப்பட்டார். இதை அவர் தானாக விரும்பி ஏற்ற ஓய்வு என்று வர்ணித்தார்.
ஒருவழியாக மூன்றாண்டுகள் அமைதியாக இருந்தவர் இப்போதுதான் படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார். முதல் படமாக தெனாலிராமன் வெளியாகிவிட்டது.
அவர் படம் வெளியான சில தினங்களிலேயே தேர்தலும் வந்தது. அரசியலே வேணாம் சாமி என பகிரங்கமாகக் கூறிவிட்ட அவர், இந்தத் தேர்தலில் வாக்களிக்கவாவது வருவாரா என காத்திருந்தது மீடியா.
காலையிலிருந்து வாக்களிக்க வராத வடிவேலு, மாலை 4-30 மணிக்குத்தான் சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளிக்கு வாக்களிக்க வந்தார்.
ஓட்டைப் பதிவு செய்து முடித்ததும், வேக வேகமாக வெளியேறினார்.