Don't Miss!
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வாக்களித்தார் 'தெனாலிராமன்' வடிவேலு!
சென்னை: கடந்த சட்டமன்றத் தேர்தலில் தன் பிரச்சாரத்தால் கலக்கிய வடிவேலு, இந்த தேர்தலின்போது ஒரு வாக்காளராக மட்டும் தன் கடமையைச் செய்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் வடிவேலு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. காரணம் அவர் திமுகவுக்கு பிரச்சார பீரங்கியாக நின்று வாக்கு சேகரித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்தார்.
ஆனால் தேர்தலில் திமுக தோற்றுப் போக, வடிவேலு சினிமாவில் ஓரங்கட்டப்பட்டார். இதை அவர் தானாக விரும்பி ஏற்ற ஓய்வு என்று வர்ணித்தார்.
ஒருவழியாக மூன்றாண்டுகள் அமைதியாக இருந்தவர் இப்போதுதான் படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார். முதல் படமாக தெனாலிராமன் வெளியாகிவிட்டது.
அவர் படம் வெளியான சில தினங்களிலேயே தேர்தலும் வந்தது. அரசியலே வேணாம் சாமி என பகிரங்கமாகக் கூறிவிட்ட அவர், இந்தத் தேர்தலில் வாக்களிக்கவாவது வருவாரா என காத்திருந்தது மீடியா.
காலையிலிருந்து வாக்களிக்க வராத வடிவேலு, மாலை 4-30 மணிக்குத்தான் சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளிக்கு வாக்களிக்க வந்தார்.
ஓட்டைப் பதிவு செய்து முடித்ததும், வேக வேகமாக வெளியேறினார்.