Don't Miss!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மாமியாராக நடிக்க மறுத்த வைஜெயந்திமாலா-ரஜினி
ரஜினியின் மனைவி லதா ரஜினி நடத்தும் ஆஷ்ரம் பள்ளியின் ஆண்டுவிழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது.
விழாவில் நடிகை சௌகார் ஜானகி, கர்நாடக இசைக் கலைஞர் டாக்டர்.எம்.பாலமுரளிகிருஷ்ணா, சித்ராலயா கோபு ஆகியோருக்கு பீஷ்ம விருதுகளும், இந்தி நடிகர் தேவ் ஆனந்த் மற்றும் வைஜயந்தி மாலா ஆகியோருக்கு ஆகியோருக்கு வாழ்நாள் நாள் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டன. விருதுகளை ரஜினிகாந்த் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய தேவ் ஆனந்த், "ரஜினி உயர்ந்த குணங்களுடன் உயர்ந்த இடத்தில் இருக்கும் றுபத கலைஞர். அவருடனான நட்பு எனக்குப் பெருமை அளிக்கிறது. மிக நல்ல முன்மாதிரியாகத் திகழும் மனிதர் அவர்" என்றார்.
நடிகை சௌகார் ஜானகி பேசுகையில், "எம்ஜிஆர், சிவாஜி போன்ற மேதைகளுடன் நடித்த நாட்கள் என் நினைவுக்கு வருகின்றன. ரஜினிகாந்த் என்ற நல்ல மனிதருக்கு தாயாக நான் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன்" என்றார்.
விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:
நான் மதிக்கும் கலைஞர்களில் மிக முக்கியமானவர் தேவ் ஆனந்த். அவரது இந்த இளமையின் ரகசியம்தான் தெரியவில்லை. உற்சாகத்தின் உருவம் அவர்.
இந்த இடத்தில் வைஜெயந்திமாலா பாலி பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். மிகச் சிறந்த நடிகை அவர்.
மாப்பிள்ளை படத்தில் எனக்கு மாமியாராக நடிக்க முதலில் ஒப்பந்தமானவர் வைஜெயந்தி மாலாதான். அதற்காக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான நண்பர் சிரஞ்சீவி ஒரு பெரும் தொகையை வைஜெயந்திமாலாவுக்கு கொடுக்க முன்வந்தார்.
ஆனால் வைஜெயந்திமாலா நடிக்க மறுத்துவிட்டார். 'உங்களுக்கு எதிராக நடிக்க என்னால் முடியாது. உங்களுடன் நான் மோதுவது போன்ற காட்சிக்கு ஒப்புக் கொள்ள மாட்டேன்' என்றார்.
இப்படிப்பட்ட உயர்ந்த கலைஞர்களைச் சிறப்பிப்பதில் எனக்குப் பெருமை" என்றார்.
லதா ரஜினிகாந்த் வரவேற்றுப் பேசினார். திரையுலகப் பிரமுகர்கள், கல்வியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.