Don't Miss!
- News ஐஏஎஸ் அதிகாரி அதுல் ஆனந்தின் மகள் கலெக்டர் ஆகிறார்.. 4வது முயற்சியில் பிரம்மாண்ட வெற்றி
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விதார்த் தொடங்கி வைத்த 'தொழில் நண்பன்'!
தொழில் நண்பன் ஒரு மாதப் பத்திரிகை. முழுக்க முழுக்க தொழில் உலகம் சார்ந்த செய்திகள், தகவல்களை இது தாங்கி வருகிறது.
இந்த இதழை ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை விஜய் பார்க் ஓட்டலில் வெளியிட்டனர்.
இதழின் முதல் பிரதியை தர்மா குரூப் நிறுவனங்களின் தலைவர் தர்மலிங்க முதலியார் வெளியிட்டார்.
நடிகர்கள் விதார்த், எஸ்வி சேகர், இசையமைப்பாளர் டி இமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, பத்திரிகையை அறிமுகம் செய்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தொழில் நண்பன் மாத இதழின் ஆசிரியரும், பதிப்பாளருமான வி.சிவக்குமார் பேசுகையில், "தமிழகத்தில் ஏற்கெனவே பல தொழில் பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், தொழில் துறைக்கு ஒரு கையேடு என்று கூறும் வகையில் தொழில் நண்பன் இருக்கும்.
எல்லாத் தொழிலுக்கும் ஏற்ற இறக்கம், லாபநட்டம் என்கிற இரு கோணங்களும் உண்டு. இந்த இருகோணங்களையும் தெளிவாக அலசும் இதழாக தொழில் நண்பன் விளங்கும்.
தொழில் செய்பவர்கள், செய்ய முனைபவர்களுக்கும் நல் ஆலோசகனாக தொழில் நண்பன் செயல்படும். இதற்காக மிகத் திறமையான ஆசிரியர் குழுவையும் தொழில் நண்பன் உருவாக்கியுள்ளது.
இன்றைய நாளில் ஒரு பத்திரிகையை புதிதாக ஆரம்பித்து, அதை வெற்றிகரமாக நடத்துவது என்பது சவாலுக்குரிய விஷயம்தான். ஆனால் சூழ்நிலை புரிந்து, வாசகர்களின் தேவை அறிந்து நடத்தினார் வெற்றிகரமாக செயல்படமுடியும்," என்றார்.