twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விதார்த் தொடங்கி வைத்த 'தொழில் நண்பன்'!

    By Shankar
    |

    Vidarth
    சென்னை: தொழில் முனைவோருக்கு உதவும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள புதிய பத்திரிகையான 'தொழில் நண்பனை' நடிகர் விதார்த், எஸ்வி சேகர் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

    தொழில் நண்பன் ஒரு மாதப் பத்திரிகை. முழுக்க முழுக்க தொழில் உலகம் சார்ந்த செய்திகள், தகவல்களை இது தாங்கி வருகிறது.

    இந்த இதழை ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை விஜய் பார்க் ஓட்டலில் வெளியிட்டனர்.

    இதழின் முதல் பிரதியை தர்மா குரூப் நிறுவனங்களின் தலைவர் தர்மலிங்க முதலியார் வெளியிட்டார்.

    நடிகர்கள் விதார்த், எஸ்வி சேகர், இசையமைப்பாளர் டி இமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, பத்திரிகையை அறிமுகம் செய்து வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் தொழில் நண்பன் மாத இதழின் ஆசிரியரும், பதிப்பாளருமான வி.சிவக்குமார் பேசுகையில், "தமிழகத்தில் ஏற்கெனவே பல தொழில் பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், தொழில் துறைக்கு ஒரு கையேடு என்று கூறும் வகையில் தொழில் நண்பன் இருக்கும்.

    எல்லாத் தொழிலுக்கும் ஏற்ற இறக்கம், லாபநட்டம் என்கிற இரு கோணங்களும் உண்டு. இந்த இருகோணங்களையும் தெளிவாக அலசும் இதழாக தொழில் நண்பன் விளங்கும்.

    தொழில் செய்பவர்கள், செய்ய முனைபவர்களுக்கும் நல் ஆலோசகனாக தொழில் நண்பன் செயல்படும். இதற்காக மிகத் திறமையான ஆசிரியர் குழுவையும் தொழில் நண்பன் உருவாக்கியுள்ளது.

    இன்றைய நாளில் ஒரு பத்திரிகையை புதிதாக ஆரம்பித்து, அதை வெற்றிகரமாக நடத்துவது என்பது சவாலுக்குரிய விஷயம்தான். ஆனால் சூழ்நிலை புரிந்து, வாசகர்களின் தேவை அறிந்து நடத்தினார் வெற்றிகரமாக செயல்படமுடியும்," என்றார்.

    English summary
    Actor Vidarth, S Ve Shekher, composer D Imman launched a new magazine Thozhil Nanban on Sunday at hotel Vijay Park, Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X