Don't Miss!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பேயடி வாங்கிய ஆதி தொடர்ந்து அதிரடியாக வெற்றி பெற்றி வந்த விஜய்க்கு ஆதி படம் வசூல் ரீதியாகவும் இமேஜ் ரீதியாகவும் பேரிடியாக அமைந்துவிட்டது. இதனால் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளாராம் இளைய தளபதி. காதல் இளவரசனாக சில காலம் நடித்து வந்த விஜய், திருமலை படத்தின் மூலம் அதிரடி நாயகனாக மாறினார். திருமலையில் அவர் செய்த ஆக்ஷன் ரோல் பேசப்பட்டதாலும், நல்ல வசூலைக் கொடுத்ததாலும் தொடர்ந்து ஆக்ஷன் படங்களுக்குத் தாவினார். அப்படியே ரஜினியைக் காப்பியடிப்பதில் ஆரம்பித்து, தெலுங்கில் வெற்றி பெறும் ஆக்ஷன் படங்களை (கில்லி அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய மைல் கல்லாக அமைந்தது) உல்டா செய்வது வரை ஒரே பார்முலாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு காலத்தை ஒட்டினார். இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல், வசூலே முக்கியம் என்று தனது பாதையில் போய்க் கொண்டே இருந்தார். அவரது முடிவு சரிதான் என்பது போல தொடர்ந்து விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, மதுர போன்ற ஆக்ஷன் படங்கள் நல்ல வசூலைக் கொடுக்கவே, ஓவர் குஷியான விஜய் கதையைப் பற்றி கவலைப்படாமல் த்ரிஷா இருந்தா போதும் என்று சுவிஸ் பக்கமாகப் போய் 4 டான்ஸ் ஆடுவது, நூறு கார்களைக் கொண்ட சேஸ் வைப்பது, அப்படியை அவற்றில் 5 வண்டிகளை குண்டு வைத்து வானில் பல்டியடிக்க வைக்க உடைப்பது, அப்படியே போற போக்கில் எதிரியை நோக்கி சவால் வசனம் பேசுவது என்று வண்டியோட்டினார். கதைக்காக விஜய் என்பது போய் விஜய்க்காக கதை என்ற டிரெண்ட் வலையில் விஜய்யும் சிக்கினார். விஜய்க்கான இயக்குனர்கள் என்றும் சிலர் அடையாளம் காணப்பட்டார்கள். இப்படிப் போய்க் கொண்டிருந்த விஜய்க்கு பிரேக் போடுவது போல ஆதி வந்து சேர்ந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் விஜய் நடித்த ஆதி, வசூல் ரீதியாக படுமோசம் செய்து விட்டதாம். பாதிக் காசு கூட இன்னும் திரும்பி வரவில்லையாம். அத்தோடு, தொடர்ந்து ஒரே மாதிரி நடிக்கிறார்ப்பா என்று அவரது ரசிகர்களே அங்கலாய்க்கும் அளவுக்கு விஜய்யின் படங்கள் போரடிக்க ஆரம்பித்து விட்டன. கூட்டிக் கழித்துப் பார்க்கையில், அஜீத்தின் பரமசிவனை விட ஆதி பட வசூல் மோசமாக உள்ளது. இதனால் விஜய்யும், ஆதி படத் தயாரிப்பாளர் பிளஸ் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகராவும் சோகமடைந்துள்ளனர். ஆதி எப்படித் தோற்றான் என்பதை விஜய்யும், சந்திரசேகராவும் உட்கார்ந்து யோசித்துப் பார்த்தபோது, வேக வேகமாக படத்தை எடுத்தது, கதையை சரியான முறையில் கையாளாதது, ஒரே மாதிரியான கேரக்டர் ஆகிய வீக்னெஸ்கள் தெரிய வந்தனவாம். இதைத் தொடர்ந்து இப்போதைக்கு ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்ற ஒரு மிக நல்ல முடிவுக்கு விஜய் வந்துள்ளார். மேலும், தொடர்ந்து ஆக்ஷன் படங்களிலேயே நடிக்காமல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம். இந் நிலையில் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு படத்தின் உரிமையை எஸ்.ஏ.சந்திரசேகரா வாங்கி வைத்துள்ளார். அதை இப்போதைக்கு அதில் நான் நடிக்க மாட்டேன் என்று தந்தையிடம் கண்டிப்பாக கூறி விட்டாராம் விஜய். இதையடுத்து அந்தக் கதையை விக்ரமை வைத்துத் தயாரிக்கப் போகிறார் சந்திரசேகரா. காலம் தாழ்ந்த முடிவுதான், இருந்தாலும் இப்போதாவது யோசித்தாரே.. அப்படியே த்ரிஷாவையும் கொஞ்ச காலத்துக்கு தூரமா வச்சுட்டு வேற ஹீரோயினைப் போடுற முடிவையும் விஜய் எடுத்தால் அவருக்கு இன்னும் நல்லது.
தொடர்ந்து அதிரடியாக வெற்றி பெற்றி வந்த விஜய்க்கு ஆதி படம் வசூல் ரீதியாகவும் இமேஜ் ரீதியாகவும் பேரிடியாக அமைந்துவிட்டது.
இதனால் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளாராம் இளைய தளபதி.
காதல் இளவரசனாக சில காலம் நடித்து வந்த விஜய், திருமலை படத்தின் மூலம் அதிரடி நாயகனாக மாறினார். திருமலையில் அவர் செய்த ஆக்ஷன் ரோல் பேசப்பட்டதாலும், நல்ல வசூலைக் கொடுத்ததாலும் தொடர்ந்து ஆக்ஷன் படங்களுக்குத் தாவினார்.
அப்படியே ரஜினியைக் காப்பியடிப்பதில் ஆரம்பித்து, தெலுங்கில் வெற்றி பெறும் ஆக்ஷன் படங்களை (கில்லி அவரது திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய மைல் கல்லாக அமைந்தது)
உல்டா செய்வது வரை ஒரே பார்முலாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு காலத்தை ஒட்டினார்.
இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல், வசூலே முக்கியம் என்று தனது பாதையில் போய்க் கொண்டே இருந்தார்.
அவரது முடிவு சரிதான் என்பது போல தொடர்ந்து விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, மதுர போன்ற ஆக்ஷன் படங்கள் நல்ல வசூலைக் கொடுக்கவே, ஓவர் குஷியான விஜய் கதையைப் பற்றி கவலைப்படாமல் த்ரிஷா இருந்தா போதும் என்று சுவிஸ் பக்கமாகப் போய் 4 டான்ஸ் ஆடுவது,
நூறு கார்களைக் கொண்ட சேஸ் வைப்பது, அப்படியை அவற்றில் 5 வண்டிகளை குண்டு வைத்து வானில் பல்டியடிக்க வைக்க உடைப்பது, அப்படியே போற போக்கில் எதிரியை நோக்கி சவால் வசனம் பேசுவது என்று வண்டியோட்டினார்.
கதைக்காக விஜய் என்பது போய் விஜய்க்காக கதை என்ற டிரெண்ட் வலையில் விஜய்யும் சிக்கினார். விஜய்க்கான இயக்குனர்கள் என்றும் சிலர் அடையாளம் காணப்பட்டார்கள்.
இப்படிப் போய்க் கொண்டிருந்த விஜய்க்கு பிரேக் போடுவது போல ஆதி வந்து சேர்ந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் விஜய் நடித்த ஆதி, வசூல் ரீதியாக படுமோசம் செய்து விட்டதாம். பாதிக் காசு கூட இன்னும் திரும்பி வரவில்லையாம்.
அத்தோடு, தொடர்ந்து ஒரே மாதிரி நடிக்கிறார்ப்பா என்று அவரது ரசிகர்களே அங்கலாய்க்கும் அளவுக்கு விஜய்யின் படங்கள் போரடிக்க ஆரம்பித்து விட்டன.
கூட்டிக் கழித்துப் பார்க்கையில், அஜீத்தின் பரமசிவனை விட ஆதி பட வசூல் மோசமாக உள்ளது.
இதனால் விஜய்யும், ஆதி படத் தயாரிப்பாளர் பிளஸ் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகராவும் சோகமடைந்துள்ளனர்.
ஆதி எப்படித் தோற்றான் என்பதை விஜய்யும், சந்திரசேகராவும் உட்கார்ந்து யோசித்துப் பார்த்தபோது, வேக வேகமாக படத்தை எடுத்தது, கதையை சரியான முறையில் கையாளாதது, ஒரே மாதிரியான கேரக்டர் ஆகிய வீக்னெஸ்கள் தெரிய வந்தனவாம்.
இதைத் தொடர்ந்து இப்போதைக்கு ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்ற ஒரு மிக நல்ல முடிவுக்கு விஜய் வந்துள்ளார். மேலும், தொடர்ந்து ஆக்ஷன் படங்களிலேயே நடிக்காமல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
இந் நிலையில் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு படத்தின் உரிமையை எஸ்.ஏ.சந்திரசேகரா வாங்கி வைத்துள்ளார். அதை இப்போதைக்கு அதில் நான் நடிக்க மாட்டேன் என்று தந்தையிடம் கண்டிப்பாக கூறி விட்டாராம் விஜய்.
இதையடுத்து அந்தக் கதையை விக்ரமை வைத்துத் தயாரிக்கப் போகிறார் சந்திரசேகரா.
காலம் தாழ்ந்த முடிவுதான், இருந்தாலும் இப்போதாவது யோசித்தாரே..
அப்படியே த்ரிஷாவையும் கொஞ்ச காலத்துக்கு தூரமா வச்சுட்டு வேற ஹீரோயினைப் போடுற முடிவையும் விஜய் எடுத்தால் அவருக்கு இன்னும் நல்லது.