Don't Miss!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய் அண்ணா போன் செய்து பாராட்டினாரே: 'குஷி'யில் 'காவியத்தலைவன்' சித்தார்த்
சென்னை: காவியத் தலைவன் படத்தை பார்த்த விஜய் அண்ணா போன் செய்து பாராட்டினார் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா உள்ளிட்டோர் நடித்த காவியத்தலைவன் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்த திரை பிரபலங்களும் படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து சித்தார்த் ட்விட்டரில் கூறுகையில்,
விஜய் அண்ணா காவியத்தலைவன் படத்தை பார்த்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. அவர் எங்களுக்கு போன் செய்து பாராட்டினார். ரசிகர்களுக்கு ஒரு சர்பிரைஸ் காத்திருக்கிறது.
சினிமா துறையினர் எங்களுக்கு போன் செய்து வாழ்த்தி வருகிறார்கள். நல்ல ஊக்கம். இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள்...வாவ்! என்று தெரிவித்துள்ளார்.
படம் பார்த்த விஜய் அதை அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.