Don't Miss!
- News மோடியிடம் கொடுத்த ராஜினாமா கடிதம்? திமுகவை விட்டு விலகியது ஏன்? ரகசியம் உடைத்த பாரிவேந்தர்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விஜய் அண்ணா போன் செய்து பாராட்டினாரே: 'குஷி'யில் 'காவியத்தலைவன்' சித்தார்த்
சென்னை: காவியத் தலைவன் படத்தை பார்த்த விஜய் அண்ணா போன் செய்து பாராட்டினார் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா உள்ளிட்டோர் நடித்த காவியத்தலைவன் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்த திரை பிரபலங்களும் படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து சித்தார்த் ட்விட்டரில் கூறுகையில்,
விஜய் அண்ணா காவியத்தலைவன் படத்தை பார்த்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. அவர் எங்களுக்கு போன் செய்து பாராட்டினார். ரசிகர்களுக்கு ஒரு சர்பிரைஸ் காத்திருக்கிறது.
சினிமா துறையினர் எங்களுக்கு போன் செய்து வாழ்த்தி வருகிறார்கள். நல்ல ஊக்கம். இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள்...வாவ்! என்று தெரிவித்துள்ளார்.
படம் பார்த்த விஜய் அதை அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும் என மக்களை கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.