Don't Miss!
- News முஸ்லீம்களுக்கு மட்டும்தான் நிறைய குழந்தைகள் இருக்காங்களா? மோடி வீட்டில் எத்தனை பேர் தெரியுமா? ஓவைசி
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சலீம் படத்தின் அடுத்த பாகம்... விஜய் ஆண்டனி அறிவிப்பு
சமீபத்தில் வெளியான சலீம் படத்தின் தொடர்ச்சியை விரைவில் தயாரித்து நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த ‘சலீம்' படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் நாயகியாக அக்ஷா பர்தசானி, நடித்துள்ளார். நிர்மல் குமார் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் அவர் முதலில் நடித்த நான் படத்தின் இரண்டாம் பாகம். சலீம் ஆகிய நான் என்றுதான் தலைப்பே வைத்திருந்தார்.
இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராயநகரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி கேக் வெட்டினார். தயாரிப்பாளர்கள் பாத்திமா, சுரேஷ், சரவணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
பின்னர் விஜய் ஆண்டனி நிருபர்களிடம் கூறுகையில், "நான்' படத்தின் 2-ம் பாகமாக ‘சலீம்' வந்துள்ளது. சமூக அவலங்களை வெளிப்படுத்தும் வகையில், விறுவிறுப்பான படமாக கொடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
முதலில் 240 தியேட்டர்களில் திரையிட்டோம். இப்போது 300 தியேட்டர்களாக உயர்ந்தள்ளது.
படம் வெற்றிகரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து என் நடிப்பில் வெளியாகும் படம் ‘இந்தியா - பாகிஸ்தான்'. ‘நான்' படத்தின் 3-ம் பாகத்தை எடுத்து அடுத்த ஆண்டு வெளியிடுவேன்," என்றார்.