சலீம் படத்தின் அடுத்த பாகம்... விஜய் ஆண்டனி அறிவிப்பு
சமீபத்தில் வெளியான சலீம் படத்தின் தொடர்ச்சியை விரைவில் தயாரித்து நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த ‘சலீம்' படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் நாயகியாக அக்ஷா பர்தசானி, நடித்துள்ளார். நிர்மல் குமார் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் அவர் முதலில் நடித்த நான் படத்தின் இரண்டாம் பாகம். சலீம் ஆகிய நான் என்றுதான் தலைப்பே வைத்திருந்தார்.
இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராயநகரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி கேக் வெட்டினார். தயாரிப்பாளர்கள் பாத்திமா, சுரேஷ், சரவணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
பின்னர் விஜய் ஆண்டனி நிருபர்களிடம் கூறுகையில், "நான்' படத்தின் 2-ம் பாகமாக ‘சலீம்' வந்துள்ளது. சமூக அவலங்களை வெளிப்படுத்தும் வகையில், விறுவிறுப்பான படமாக கொடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
முதலில் 240 தியேட்டர்களில் திரையிட்டோம். இப்போது 300 தியேட்டர்களாக உயர்ந்தள்ளது.
படம் வெற்றிகரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து என் நடிப்பில் வெளியாகும் படம் ‘இந்தியா - பாகிஸ்தான்'. ‘நான்' படத்தின் 3-ம் பாகத்தை எடுத்து அடுத்த ஆண்டு வெளியிடுவேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











