Don't Miss!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- News உலகத்திலேயே நடக்காதது.. மன்னிக்க முடியாதது- மதிமுக கணேசமூர்த்தி மரணம் படுகொலையே..தமிழிசை படு ஆவேசம்!
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தானாக விரும்பிக் கேட்டு ‘கேஜிஎஃப்’ பார்த்த முன்னணி நடிகர்.. பாராட்டும் கிடைத்ததால் படக்குழு ஹேப்பி!
கே.ஜி.எஃப். சிறப்புக்காட்சி பார்த்து விட்டு நடிகர் விஜய் பாராட்டியதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தைப் பார்த்து விட்டு படக்குழுவை நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.
ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பாக விஜய் கிரகந்தர் தயாரிப்பில் பிரசாத் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடித்திருந்த படம் "கே.ஜி.எஃப்". கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதீயாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது இப்படம்.
மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளிலும் வெளியானது. இப்படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி ரிலீஸ் செய்தது.
இந்நிலையில், இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அறிந்த விஜய், தானும் கே.ஜி.எஃப் படத்தைப் பார்க்க விரும்பியுள்ளார். இதனால், சென்னையில் அவருக்கு படத்தை பிரத்யேகமாக படக்குழு திரையிட்டது.
படத்தை பார்த்த நடிகர் விஜய், 'கே.ஜி.எஃப்" படம் எடுக்கப்பட்ட விதம் பிரம்மாண்டமாகவும், நடிகர்களின் நடிப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளதாக' பாராட்டியுள்ளார். மேலும், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜயின் இந்த பாராட்டால் "கே.ஜி.எஃப்" படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.