அடையாறு மாநகராட்சி பள்ளியில் வாக்களித்தார் விஜய்
சென்னை: நடிகர் விஜய் தனது வாக்கை காலை 10 மணிக்கு செலுத்தினார்.
தமிழ் சினிமா நடிகர்கள் வாக்களிப்பதை மிக முக்கிய கடமையாகக் கருதி, தவறாமல் வாக்களிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தன்னைப் பின்பற்றும் ரசிகர்களும் இதுபோல ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

வெளியில், க்யூ போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் காத்திருந்து வாக்களிப்பதையும் காண முடிகிறது.
முன்னணி நடிகர் விஜய் எங்கே எப்போது வாக்களிப்பார் என்ற தகவலை அவரது பிஆர்ஓ வெளியிட்டுள்ளார்.
அடையாறு தொலைபேசி இணைப்பகத்துக்கு அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் இன்று காலை 10 மணிக்கு விஜய் வாக்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வாக்களிக்க வந்த விஜய், வரிசையில் நின்று வாக்களித்தார்.
விஜய் இந்தத் தேர்தலுக்கு முன் கோவை சென்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியைச் சந்தித்தது நினைவிருக்கலாம், கடைசி நேரத்தில் மோடிக்கு ஆதரவாக இவர் அறிக்கை தருவார் என கூறப்பட்டது. ஆனால் விஜய் அப்படி எந்த அறிக்கையும் தரவில்லை.


Click it and Unblock the Notifications











