முதல்வரை இழிவுபடுத்தியதை, என் தாயை தப்பாக பேசிய மாதிரி நினைக்கிறேன்!- விஜய் பேச்சு
சென்னை: இலங்கை அரசு முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி இழிவாக கட்டுரை வெளியிட்டதை, என் தாயை தப்பாக பேசின மாதிரி நினைக்கிறேன் என நடிகர் விஜய் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை பற்றி இழிவாக கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்தும், சென்னையில் உள்ள அந்நாட்டு துணை தூதரகத்தை மூடக்கோரியும் தமிழ் திரையுலகினர் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கென தூதரகம் முன்பு தனி பந்தல் போடப்பட்டு, பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
இதில் நடிகர் விஜய் முதல் ஆளாகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ''ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நம் மீனவர்களுடைய கஷ்டங்களை தீர்ப்பதற்காக நம்முடைய தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள், எவ்வளவோ முயற்சிகளை எடுத்துக்கிட்டு இருக்காங்க.
அதை இலங்கை அரசு அவர்களுடைய பாதுகாப்புத் துறை வெப்சைட்டில் கொச்சைப்படுத்துவது போன்று ஒரு கமெண்ட் போட்டிருப்பது உண்மையிலேயே என் தாயை தப்பாக பேசின மாதிரிதான் நினைக்கிறேன்.
இது ஒட்டுமொத்த தமிழருக்குமே ரொம்ப, ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம். அதை கடுமையாக கண்டிக்கிறோம்,'' என்றார்.


Click it and Unblock the Notifications











