Don't Miss!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய் சேதுபதி, மணிரத்னம், ஷங்கர்: லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கே விஜய்
Recommended Video
சென்னை: விஜய் தேவரகொண்டா தனது ஆசையை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் விஜய் தேவரகொண்டா. நோட்டா படம் மூலம் கோலிவுட் வந்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகைகள் கிடைத்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு படங்கள் ரிலீஸானால் மொழி தெரியாவிட்டாலும் அவருக்காக பார்க்க தமிழகத்தில் பல ரசிகைகள் உள்ளனர். அதில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவிகள்.
விஜய் சேதுபதி
சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடித்து கைதட்டல்களை பெற்றார். எந்த ஒரு முன்னணி ஹீரோவும் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க யோசிப்பார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி ஷில்பா நடித்ததை பார்த்து ரசிகர்கள் மட்டும் அல்ல விஜய் தேவரகொண்டாவும் அசந்துபோயுள்ளார்.
இயக்குநர்கள்
நடிப்பில் அமர்க்களப்படுத்தும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். தமிழில் எந்தெந்த இயக்குநர்களுடன் சேர்ந்து படம் பண்ண ஆசைப்படுகிறீர்கள் என்று விஜய்யிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், மணிரத்னம், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ஆகியோரின் படங்களில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
மணிரத்னம்
காதலை கொண்டாடும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க பல இளம் ஹீரோக்கள் ஆசைப்படுகிறார்கள். விஜய்க்கு அந்த பாக்கியம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஷங்கர் தற்போது இந்தியன் 2 பட வேலைகளில் பிசியாக உள்ளார். அடுத்ததாக அவர் முதல்வன் 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தி
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ள டியர் காம்ரேட் படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹார். ஏற்கனவே விஜய்யின் அர்ஜுன் ரெட்டி படம் கபிர் சிங் என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ஷாஹித் கபூர் நடித்த கபிர் ரூ. 260 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் விஜய்யின் மேலும் ஒரு படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஷாஹித் கபூரின் கெரியரில் பிரமாண்ட வெற்றி பெற்ற படம் என்றால் அது கபிர் சிங் தான்.