Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முதல்வர் ஹெலிகாப்டரில் போகும்போது தரையில் விழுந்து வணங்குவது காமெடியாக இருக்கு: விஜய்
சென்னை: முதல்வர் ஹெலிகாப்டரில் செல்லும்போது கட்சியினர் தரையில் விழுந்து வணங்குவது காமெடியாக உள்ளது என்று நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படம் மூலம் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா நோட்டா படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். நோட்டா படம் வரும் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் அவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நண்பர்கள்
என் முதல் படமான பெல்லி சூப்புலு படத்திற்கே தமிழகத்தில் அமோக ஆதரவு கிடைத்தது. அந்த படம் இங்குள்ள சில தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியுள்ளது. என் தெலுங்கு நண்பர்கள் பலர் தமிழகத்தில் படிக்கிறார்கள், வேலை செய்கிறார்கள். அவர்கள் அர்ஜுன் ரெட்டி படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை, ஏதாவது செய்து ஏற்பாடு செய்யுங்கள் என்று எனக்கு போன் செய்தார்கள்.
தமிழக மக்கள்
அர்ஜுன் ரெட்டி படத்தை நான் தமிழகத்தில் ப்ரொமோட் செய்யவில்லை. தமிழக மக்கள் என் மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பது வியப்பாக உள்ளது. நோட்டா படம் அரசியலமைப்பை பற்றியது. படத்தில் கற்பனையாக ஒரு காட்சி வைக்கப்பட்டது. அந்த காட்சியை நாங்கள் படமாக்கியபோது சென்னையில் நிஜமாகவே அதே போன்ற ஒரு நிகழ்வு நடந்தது.
அதிர்ச்சி
படத்தில் கற்பனையாக வைத்தது எப்படி நிஜத்தில் நடக்கிறது என்று எனக்கு வியப்பாக இருந்தது. அந்த சம்பவத்தை நினைத்து 2, 3 நாட்கள் அதிர்ந்து போனேன். நான் ஹைதராபாத் சென்ற பிறகு சென்னையில் நடந்த சம்பவம் பற்றி என் நண்பர்களிடம் கூறியபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சாதாரண ஆள் அரசியலில் தள்ளப்படுகிறான். அது தான் என் கதாபாத்திரம். அதனால் தமிழர்களே தமிழர்களே என்று இருக்க வேண்டியது இல்லை.
காமெடி
உங்கள் மாநில முதல்வர் ஹெலிகாப்டரில் செல்லும்போது கட்சியினர் தரையில் படுத்து வணங்கியதை பார்த்து சிரிப்பாக இருந்தது. ஹெலிகாப்டரில் செல்பவருக்கு அவர்கள் தரையில் விழுந்து கும்பிடுவதை பார்க்க முடியாது. நோட்டா படத்தில் நாசர் சார் பெரிய அரசியல்வாதியாக நடித்துள்ளார். படத்தில் அவர் கட்சியினர் அனைவரும் சட்டைப் பையில் அவரின் புகைப்படத்தை வைத்திருப்பார்கள். அதை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது.
அரசியல்வாதிகள்
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் டிரான்ஸ்பரன்ட்டாக சட்டை அணிந்து பையில் கட்சி தலைவரின் புகைப்படத்தை வைத்திருப்பார்கள் என்று பின்னர் என்னிடம் கூறினார்கள். கட்சியினர் அனைவரும் நாசரை பார்த்தவுடன் குனிந்து கும்பிடு போடுவார்கள். அதை பார்க்கும் அவர் நிமிர்ந்து என் முகத்தை பாருங்கள். இல்லை என்றால் எனக்கு சிலை செய்தால் என் முகம் எப்படி இருக்கும் என்று தெரியாமல் வேறு யார் முகத்தையாவது வைத்துவிடுவீர்கள் என்பார்.
ரஜினி
நான் பொதுவாக குறைந்த அளவிலான படங்கள் பார்த்துள்ளேன். நான் என் வாழ்நாளில் பெரும் பகுதியை போர்டிங் ஸ்கூலில் கழித்துள்ளேன். அங்கு மாதத்திற்கு ஒரு படம் தான் திரையிடுவார்கள். 2 மாத விடுமுறையில் வீட்டுக்கு வந்தால் ரஜினிகாந்த் படங்களை பார்ப்பேன். ஏனென்றால் அவரின் படங்கள் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படுகின்றன. அருணாசலம், தளபதி படங்களை பார்த்துள்ளேன். நான் பெரியவானான பிறகு ஹைதராபாத் வந்தபோது தனுஷ், கார்த்தி, சூர்யா ஆகியோரின் படங்களை பார்த்துள்ளேன். விக்ரம் சாரின் அந்நியன் படத்தை தெலுங்கில் பார்த்திருக்கிறேன்.
தனுஷ்
மாரி படத்தில் தனுஷ் பேசும் செஞ்சிருவேன் வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல கதையுடன் வரும் எந்த இயக்குனரின் படத்திலும் நடிப்பேன். நான் நோட்டா படத்தை சென்னையில் உள்ள தியேட்டரில் அதுவும் அதிகாலை காட்சியை பார்க்க விரும்புகிறேன். நான் இந்த படத்தை பார்க்க மரண வெயிட்டிங். தவறுகள் செய்திருந்தால் அந்த அரசியல்வாதிகளுக்கு இந்த படத்தை பார்த்தால் உறுத்தும் என்றார் விஜய்