கத்தி படத்தில் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் விஜய்
சென்னை: கத்தி படத்தில் விஜய் மக்கள் பிரச்சனையை தீர்க்க போராடுகிறாராம்.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா லண்டனில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் சென்னையிலேயே இசையை வெளியிடுகிறார்கள்.

குளிர்பான நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடைய தண்ணீர் பிரச்சனையை மையமாக வைத்து படம் நகர்கிறதாம். படத்தில் விஜய் மக்களுக்காக எப்படி குரல் கொடுக்கிறார், பிரச்சனைகளை சந்திக்கிறார், அதை தீர்க்கிறார் என்பது தான் கதையாம்.
கத்தி படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. படத்தில் விஜய் அனிருத் இசையில் ஸ்ருதி ஹாஸனுடன் சேர்ந்து ஒரு பாடல் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications