தளபதி விஜய் சந்தித்த ரோதனைகள்
Recommended Video

சென்னை: தளபதி விஜய் சந்தித்த ரோதனைகளை பார்ப்போம்.
சர்கார் பட போஸ்டருக்கு தம்மடிப்பது போன்று ஏ.ஆர். முருகதாஸ் சொல்ல விஜய் போஸ் கொடுத்தார். அது எப்படி தம்மடிக்கலாம் என்று பிரச்சனை கிளம்பியுள்ளது.
போஸ்டர் பிரச்சனை சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.

பிரச்சனை
அண்மை காலமாக விஜய் படங்கள் பிரச்சனைகளை சந்தித்த வண்ணம் உள்ளன. தலைவா படத்திற்கு டைம் டூ லீட் என்று ஒரு வரியை(கேப்ஷன்) சேர்த்ததால் படத்தை ரிலீஸ் செய்ய விஜய் படாதபாடு பட்டது தமிழக மக்கள் அறிந்ததே.

ஜி.எஸ்.டி.
மெர்சல் படத்தில் எந்த அரசியல் வசனமும் வேண்டாம் என்று விஜய் இயக்குனர் அட்லியிடம் தெரிவித்திருந்தார். அப்படி இருந்தும் அட்லி ஜி.எஸ்.டி. பற்றி வசனம் வைக்க அதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனையை கிளப்பியது.

விளம்பரம்
மெர்சல் பிரச்சனை பூதாகரமாக வெடித்ததால் படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்தது தனிக் கதை. ஆனால் பாவம் மெர்சல் படக்குழு டென்ஷனில் இருந்தது.

சிகரெட்
சர்கார் படத்தில் விஜய் ஆசைப்பட்டு தம்மடிக்கவில்லை. இயக்குனர் முருகதாஸ் சொன்னதை செய்ததற்கே பிரச்சனை கிளம்பிவிட்டது. சர்கார் பட போஸ்டரை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆசை
விஜய்க்கு அரசியலுக்கு வரும் ஆசை உள்ளது என்று கோலிவுட்டில் பலகாலமாக பேசுகிறார்கள். அவர் தமிழக முதல்வராக வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். விஜய் நாட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்று அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் விரும்புகிறார். இந்நிலையில் அவர் படங்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











