ரெடி, ஆக்ஷன், ஷூட்... கேமராவைக் கையில் எடுத்து படம் பிடித்த விஜய்!

By Sudha

Vijay
துப்பாக்கி படம் மூலம் புதிய அவதாரம் எடுக்கிறார் விஜய். மும்பையில் ஷூட்டிங் நடந்தபோது இவரே கேமராவைக் கையில் எடுத்து ஒரு காட்சியை ஷூட் செய்துள்ளாராம். சும்மா சொல்லக் கூடாது, அந்தக் காட்சி அட்டகாசமாக வந்துள்ளதாம்.

விஜய் குறித்து விளக்கமாக சொல்லத் தேவையில்லை. டான்ஸ், பாட்டு, நடிப்பு, அடிதடி என எக்கச்சக்க ரோல்களில் பிரமாதப்படுத்தக் கூடியவர். இத்தோடு இன்னொரு திறமையையும் தன் பக்கம் இழுத்துள்ளார் - அது ஒளிப்பதிவு.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் துப்பாக்கி படத்தில்தான் இந்தக் கூத்து. மும்பையில் சமீபத்தில் ஒரு நெருக்கடியான தெருவில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு காட்சியை தானே படம் பிடிக்க விரும்புவதாக விஜய் கூறியுள்ளார். இதையடுத்து கேமராமேன் சந்தோஷ் சிவன் ஓ.கே. சொல்ல விஜய் கேமராவை கையாண்டு காட்சியைப் படம் பிடித்தாராம். காட்சி நன்றாகவும் வந்துள்ளதாம். இருப்பினும் இது படத்தில்இடம் பெறுமா என்பது தெரியவில்லை.

இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பெப்பியான பாடலையும் பாடியுள்ளார் விஜய். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்தப் பாடல் அவரது ரசிகர்களை தாளம் போட வைக்குமாம். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பாடியுள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் பாடிய பாடல் வாடி வாடி கைபடாத சிடி...

பெரும்பாலான காட்சிகளை மும்பையில் வைத்தே இப்படத்துக்காக சுட்டுள்ளார் முருகதாஸ். படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வரும் விஜய், அதிரடி சண்டைக் காட்சிகளிலும் அசத்தியுள்ளார்.

சரி, விஜய் படம் பிடித்த காட்சியைப் படத்தில் சேர்த்தால், இந்தக் காட்சியைப் படம் பிடித்தவர் உங்கள் விஜய் என்று கார்டு போடுவார்களா...?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X