Don't Miss!
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- News திருவண்ணாமலையில் "பேய்" வருதாமே.. 6 மணிக்கு வெள்ளை டிரஸ்ஸில்.. ஹைவேஸில் நிக்குதாம்.. பார்த்தீங்களா?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ஈழத் தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும்- இது நடிகர் விஜய்யின் 'பிரார்த்தனைக்' கடிதம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் நேற்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
நடிகர் அஜீத், சூர்யா, கார்த்தி ஆகியோர் காலையில் தொடங்கி மாலை வரை உண்ணாவிரதம் இருந்தனர்.
உடல்நிலை காரணமாக, சூப்பர்ஸ்டார் ரஜினி சில மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். மாலையில் வந்த கமல் சில நிமிடங்கள் மட்டுமே இருந்தார்.
நடிகர் விஜய் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் உண்ணாவிர போரட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் போராட்டம் குறித்து சங்கத்தலைவர் சரத்குமாருக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.
அக்கடிதத்தில் அவர், ''தமிழ் உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும் ஈழத்தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை எண்ணி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த உணர்வுகளை பயிர் செய்யும் விதத்தில் கலைஞர்கள் ஒன்று திரண்டு உங்கள் (சரத்குமார்) தலைமையில் உண்ணாவிரதம் நடத்துவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த போராட்டத்தில் நானும் கலந்து கொள்ள வேண்டு என்ற உணர்வு இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் படப்பிடிப்பில் இருப்பதால் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள இயலாதது குறித்து வருத்தமடைகிறேன். ஈழத் தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.