Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்க நன்றாக படியுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
நடிகர் விஜய் ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கிறார். இது தவிர ஆண்டுதோறும் மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறார். பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளில் மாநிலத்தில் முதல் 3 இடங்களை பிடித்த ஏழை மாணவ-மாணவியருக்கு ரூ.15 லட்சம் உதவித் தொகை, நோட்டு புத்தகங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவியருக்கு கேடயம், வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் வழங்கி தன் கையாலேயே அவர்களுக்கு உணவு பரிமாறினார். இதையடுத்து மாணவர்கள் மத்தியில் விஜய் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். நாம் நமக்காக, நமது குடும்பத்திற்காக, நம் நாட்டிற்காக நன்றாக படித்து நல்ல பிள்ளைகள் என்று பெயர் வாங்க வேண்டும். தரமான கல்வியால் மட்டுமே உலக அளவில் இந்தியாவை தலைநிமிர்ந்து நிற்க வைக்க முடியும். அதனால் அத்தகைய கல்வியை பயின்று நாட்டின் தரத்தை உயர்த்துங்கள் என்றார்.