என்னோட வெறித்தனமான ரசிகர்கள் உடனிருக்கும் வரை... - விஜய்யின் திடீர் தைரியம்
ஜில்லா பட 100வது நாள் விழாவில் மோடியுடனான சந்திப்பு குறித்தோ, வேறு அரசியல் பற்றியோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை நடிகர் விஜய்.
அதே நேரம் என்னுடைய வெறித்தனமான ரசிகர்கள் உடனிருக்கும்வரை என்னை ஒன்றுமே செய்ய முடியாது என்ற அர்த்தம் வரும் வகையில் பேசினார் விஜய்.

ஜில்லா படத்தின் 100 வது நாள் விழாவில் விஜய் பங்கேற்கிறார் என்றதுமே, அவர் ஏதாவது அரசியல் பேசுவார் என்றுதான் எதிர்ப்பார்த்தனர். சமீபத்தில்தான் மோடியை அவர் தேடிப் போய்ப் பார்த்துவிட்டு வந்திருந்ததால், நிச்சயம் அதுபற்றியாவது பேசுவார் என்று மீடியா காத்திருந்தது.
ஆனால் விஜய் அப்படியெல்லாம் எதுவுமே பேசவில்லை. தலைவா படம் குறித்துப் பேசியபோது கூட, அந்தப் பிரச்சினைகளைப் பேசாமல் தவிர்த்தார்.
அதே நேரம், 'என்னோட ஒவ்வொரு படமும் ரிலீசாகும் போதும் இது நல்லா ஓடணும்கிறதுல என்னை விட ஆர்வமாகவும், வெறியாகவும் இருக்காங்க. அப்படிப்பட்ட ரசிகர்கள் என் கூட இருக்கிற வரைக்கும்....? சரி விடுங்க...!' என்று தன் பேச்சின் நடுவே குறிப்பிட்டதில் வேண்டுமானால் அரசியல் இருக்குமோ.. இது தலைவாவுக்கு பிரச்சினை ஏற்படுத்தியவர்களுக்கு எதிரான குரலா... என்றெல்லாம் அர்த்தம் பார்க்க ஆரம்பித்துவிட்டனர் மீடியாக்காரர்கள்!


Click it and Unblock the Notifications











