Don't Miss!
- Finance JIO: உலகின் டேட்டா ட்ராஃபிக் சாம்பியன்..! சீனாவை ஓடவிட்ட முகேஷ் அம்பானி..!!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என்னோட வெறித்தனமான ரசிகர்கள் உடனிருக்கும் வரை... - விஜய்யின் திடீர் தைரியம்
ஜில்லா பட 100வது நாள் விழாவில் மோடியுடனான சந்திப்பு குறித்தோ, வேறு அரசியல் பற்றியோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை நடிகர் விஜய்.
அதே நேரம் என்னுடைய வெறித்தனமான ரசிகர்கள் உடனிருக்கும்வரை என்னை ஒன்றுமே செய்ய முடியாது என்ற அர்த்தம் வரும் வகையில் பேசினார் விஜய்.
ஜில்லா படத்தின் 100 வது நாள் விழாவில் விஜய் பங்கேற்கிறார் என்றதுமே, அவர் ஏதாவது அரசியல் பேசுவார் என்றுதான் எதிர்ப்பார்த்தனர். சமீபத்தில்தான் மோடியை அவர் தேடிப் போய்ப் பார்த்துவிட்டு வந்திருந்ததால், நிச்சயம் அதுபற்றியாவது பேசுவார் என்று மீடியா காத்திருந்தது.
ஆனால் விஜய் அப்படியெல்லாம் எதுவுமே பேசவில்லை. தலைவா படம் குறித்துப் பேசியபோது கூட, அந்தப் பிரச்சினைகளைப் பேசாமல் தவிர்த்தார்.
அதே நேரம், 'என்னோட ஒவ்வொரு படமும் ரிலீசாகும் போதும் இது நல்லா ஓடணும்கிறதுல என்னை விட ஆர்வமாகவும், வெறியாகவும் இருக்காங்க. அப்படிப்பட்ட ரசிகர்கள் என் கூட இருக்கிற வரைக்கும்....? சரி விடுங்க...!' என்று தன் பேச்சின் நடுவே குறிப்பிட்டதில் வேண்டுமானால் அரசியல் இருக்குமோ.. இது தலைவாவுக்கு பிரச்சினை ஏற்படுத்தியவர்களுக்கு எதிரான குரலா... என்றெல்லாம் அர்த்தம் பார்க்க ஆரம்பித்துவிட்டனர் மீடியாக்காரர்கள்!