Don't Miss!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- News கன்னியாகுமரி எம்பி தொகுதி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
வில்லேஜ் மசாலாவுக்கு ரெடியாகிவிட்டார் விஜய் சேதுபதி... பொன் ராம் இயக்கத்தில் மே மாதம் ஷூட்டிங்
சென்னை: எம்.ஜி.ஆர் மகன் படத்தை அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குகிறார் பொன்ராம்
சிவகார்த்திகேயன், ஶ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன், சிவகார்த்திகேயன், சமந்தா நடித்த சீமராஜா ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம்.
இவர் இப்போது சசிகுமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், மிருணாளினி ரவி, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர்.
கொஞ்சம் ஆசை, கொஞ்சம் உணவு, கொஞ்சம் பேச்சு... இதை பண்ணினா 70 வயசுலயும் எனர்ஜி... ரஜினி தகவல்
விஜய் சேதுபதி
இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதையடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குகிறார் பொன்ராம். இந்தப் படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்குவதாக இருந்தது.
மே மாதம் ஷூட்டிங்
விஜய் சேதுபதி மற்ற படங்களில் பிசியாக இருப்பதால், மே மாதம் தொடங்க இருக்கிறது. படம்பற்றி பொன்ராம் கூறும்போது, திண்டுக்கல் பின்னணியில் நடக்கும் வில்லேஜ் மசாலா கதை. சிவகார்த்திகேயன் நடிப்பில் நான் இயக்கிய முந்தைய படங்களை போல இது இருக்காது.
வித்தியாசமான கதை
காமெடி, காதல், ஆக்ஷன் பார்முலா கதைதான். இருந்தாலும் வித்தியாசமாக இருக்கும். இந்த கதை விஜய் சேதுபதிக்காக செய்யப்பட்டது போல இருக்கும்.
முன்னணி நிறுவனம்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் நிறுவனம் இணை தயாரிப்பு செய்கிறது. படத் தயாரிப்பு சம்பந்தமாக முன்னணி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். விரைவில் அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார்.