Don't Miss!
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta
Recommended Video
சென்னை: பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் விஜய் சேதுபதி.
பேட்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. நேற்றைய விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் விஜய் சேதுபதி என்றே கூறலாம்.
லேட்டாக வந்தவரை நேரடியாக மேடைக்கு அழைத்தனர்.
|
ஆச்சரியம்
விஜய் சேதுபதியை மேடைக்கு அழைத்ததுமே ரசிகர்கள் எழுப்பிய கரகோஷத்தை பார்த்து அனைவரும் வியந்தனர். அந்த அளவுக்கு அவருக்கு அமோக வரவேற்பு கொடுத்தனர். ரஜினியே எழுந்து நின்று விஜய் சேதுபதியை வரவேற்றார். மாஸு தான் போங்க விஜய் சேதுபதி.
96
96 படத்தில் தன்னுடன் நடித்த த்ரிஷாவை பார்த்ததும் இது என் ஜானு சார் என்று விஜய் சேதுபதி ரஜினியிடம் கூறியது க்யூட்டாக இருந்தது. இதை கேட்ட த்ரிஷா வெட்கப்பட்டு சிரித்தார். ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறிய பூரிப்பு த்ரிஷா முகத்தில் நேற்று தெரிந்தது. அவ்வளவு மகிழ்ச்சியாகவும், அழகாகவும் இருந்தார்.
விஜய் சேதுபதி
நேற்றைய நிகழ்ச்சியில் அனைவருமே ரஜினிக்கு ஐஸ் இல்லை ஐஸ் பாரையே வைத்தனர். ஆனால் விஜய் சேதுபதி ரஜினியை எக்ஸ்ட்ரா புகழவில்லை. பெரிய ஆளுடன் மோதினால் தான் பெரிய ஆள் ஆக முடியும் என்று உண்மையை சொன்ன விஜய் சேதுபதியை பாராட்டியே ஆக வேண்டும்.
பயம்
ரஜினிக்கு வில்லனாக நடிப்பவர்கள் அய்யோ தலைவர் ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்களோ, திட்டுவார்களோ என்று பயப்படுவார்கள். ஆனால் விஜய் சேதுபதி தில்லாக நான் தான் அவரின் வில்லன் என்றார். மேலும் யாரை நினைத்தும் அவர் பயப்படவில்லை. அந்த குணம் தான் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.