Don't Miss!
- News ஆட்டத்தை கலைத்த பாஜக.. பெரிய கூட்டணி இல்லாமல் களம் இறங்கும் அதிமுக.. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது?
- Finance 20000 ரூபாய்க்கு கீழ் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் ஷாப்பிங்
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta
Recommended Video
சென்னை: பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் விஜய் சேதுபதி.
பேட்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. நேற்றைய விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் விஜய் சேதுபதி என்றே கூறலாம்.
லேட்டாக வந்தவரை நேரடியாக மேடைக்கு அழைத்தனர்.
|
ஆச்சரியம்
விஜய் சேதுபதியை மேடைக்கு அழைத்ததுமே ரசிகர்கள் எழுப்பிய கரகோஷத்தை பார்த்து அனைவரும் வியந்தனர். அந்த அளவுக்கு அவருக்கு அமோக வரவேற்பு கொடுத்தனர். ரஜினியே எழுந்து நின்று விஜய் சேதுபதியை வரவேற்றார். மாஸு தான் போங்க விஜய் சேதுபதி.
96
96 படத்தில் தன்னுடன் நடித்த த்ரிஷாவை பார்த்ததும் இது என் ஜானு சார் என்று விஜய் சேதுபதி ரஜினியிடம் கூறியது க்யூட்டாக இருந்தது. இதை கேட்ட த்ரிஷா வெட்கப்பட்டு சிரித்தார். ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறிய பூரிப்பு த்ரிஷா முகத்தில் நேற்று தெரிந்தது. அவ்வளவு மகிழ்ச்சியாகவும், அழகாகவும் இருந்தார்.
விஜய் சேதுபதி
நேற்றைய நிகழ்ச்சியில் அனைவருமே ரஜினிக்கு ஐஸ் இல்லை ஐஸ் பாரையே வைத்தனர். ஆனால் விஜய் சேதுபதி ரஜினியை எக்ஸ்ட்ரா புகழவில்லை. பெரிய ஆளுடன் மோதினால் தான் பெரிய ஆள் ஆக முடியும் என்று உண்மையை சொன்ன விஜய் சேதுபதியை பாராட்டியே ஆக வேண்டும்.
பயம்
ரஜினிக்கு வில்லனாக நடிப்பவர்கள் அய்யோ தலைவர் ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்களோ, திட்டுவார்களோ என்று பயப்படுவார்கள். ஆனால் விஜய் சேதுபதி தில்லாக நான் தான் அவரின் வில்லன் என்றார். மேலும் யாரை நினைத்தும் அவர் பயப்படவில்லை. அந்த குணம் தான் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.