Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஜினி சொன்னார்: விஜய் சேதுபதி செய்துவிட்டார் #Petta
Recommended Video
சென்னை: பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் விஜய் சேதுபதி.
பேட்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. நேற்றைய விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் விஜய் சேதுபதி என்றே கூறலாம்.
லேட்டாக வந்தவரை நேரடியாக மேடைக்கு அழைத்தனர்.
|
ஆச்சரியம்
விஜய் சேதுபதியை மேடைக்கு அழைத்ததுமே ரசிகர்கள் எழுப்பிய கரகோஷத்தை பார்த்து அனைவரும் வியந்தனர். அந்த அளவுக்கு அவருக்கு அமோக வரவேற்பு கொடுத்தனர். ரஜினியே எழுந்து நின்று விஜய் சேதுபதியை வரவேற்றார். மாஸு தான் போங்க விஜய் சேதுபதி.
96
96 படத்தில் தன்னுடன் நடித்த த்ரிஷாவை பார்த்ததும் இது என் ஜானு சார் என்று விஜய் சேதுபதி ரஜினியிடம் கூறியது க்யூட்டாக இருந்தது. இதை கேட்ட த்ரிஷா வெட்கப்பட்டு சிரித்தார். ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறிய பூரிப்பு த்ரிஷா முகத்தில் நேற்று தெரிந்தது. அவ்வளவு மகிழ்ச்சியாகவும், அழகாகவும் இருந்தார்.
விஜய் சேதுபதி
நேற்றைய நிகழ்ச்சியில் அனைவருமே ரஜினிக்கு ஐஸ் இல்லை ஐஸ் பாரையே வைத்தனர். ஆனால் விஜய் சேதுபதி ரஜினியை எக்ஸ்ட்ரா புகழவில்லை. பெரிய ஆளுடன் மோதினால் தான் பெரிய ஆள் ஆக முடியும் என்று உண்மையை சொன்ன விஜய் சேதுபதியை பாராட்டியே ஆக வேண்டும்.
பயம்
ரஜினிக்கு வில்லனாக நடிப்பவர்கள் அய்யோ தலைவர் ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்களோ, திட்டுவார்களோ என்று பயப்படுவார்கள். ஆனால் விஜய் சேதுபதி தில்லாக நான் தான் அவரின் வில்லன் என்றார். மேலும் யாரை நினைத்தும் அவர் பயப்படவில்லை. அந்த குணம் தான் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.