Don't Miss!
- News "வாழ்க திராவிட மாடல்".. 'இது என்ன கொடுமை?' பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
என் வாயில் ஒருவர் சிறுநீர் கழித்தார்: விஜய் சேதுபதி
Recommended Video
சென்னை: விஜய் சேதுபதி தான் நடித்த முதல் படத்தின் முதல் காட்சி குறித்து தெரிவித்துள்ளார்.
சுமார் மூஞ்சி குமாரான விஜய் சேதுபதி தனது திறமை மற்றும் கடின உழைப்பால் கோலிவுட்டின் முன்னணி நடிகராகியுள்ளார். அது மட்டும் அல்ல தனது நல்ல குணத்தால் ரசிகர்கள் கொண்டாடும் நபராக உள்ளார்.
அவரின் 25வது படமான சீதக்காதி நாளை ரிலீஸாகிறது.
ஹீரோ
விஜய் சேதுபதி கூத்துப்பட்டறையில் இருந்து வெளியே வந்த உடனே ஹீரோவாகிவிடவில்லை. கிடைத்த சிறு சிறு கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து அதன் பிறகே ஹீரோவானார். தனுஷ் படத்தில் எக்ஸ்ட்ராவாக நடித்த விஜய் சேதுபதி இன்று ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
முதல் காட்சி
அனைத்து நடிகர்களுக்குமே தாங்கள் நடித்த முதல் படத்தின் முதல் காட்சி என்றுமே மறக்காது. விஜய் சேதுபதி நடித்த முதல் காட்சியை அவராலும் மறக்க முடியாது. ஆனால் அவர் நடித்த காட்சியில் நடிக்க எத்தனை பேர் ஒப்புக் கொண்டிருப்பார்கள் என்பது தான் தெரியவில்லை.
விஜய் சேதுபதி
வர்ணம் என்ற படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் படமான அதில் அவர் பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவராக நடித்தார். அவரின் முதல் காட்சி என்னவென்றால் அவரின் வாயில் ஒருவர் சிறுநீர் கழிப்பார். அந்த காட்சியில் நடித்து முடித்த பிறகு செட்டில் இருந்த அனைவரும் கை தட்டியதாக விஜய் சேதுபதி பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கைதட்டல்
ஒரு நடிகனை ஊக்குவிப்பது கைதட்டல்களும், பாராட்டும் தான். வர்ணம் படத்தில் முதல் காட்சியில் நடித்த பிறகு கிடைத்த கைதட்டல்கள் தான் நம்மாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் சேதுபதிக்கு கொடுத்துள்ளது.