Don't Miss!
- Sports பக்கத்தில் வந்து தோற்றுவிட்டோம்! இதயம் முற்றிலும் நொறுங்கிவிட்டது..பஞ்சாப் கேப்டன் சாம் கரண் கருத்து
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
"காக்கி"யை கையில் எடுக்கும் விஜய் சேதுபதி...!
சென்னை: 2010 ம் ஆண்டு சீனு ராமசாமியின் இயக்கத்தில் தென்மேற்குப் பருவகாற்று திரைப்படத்தில், நாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி இன்று தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.
சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், புறம்போக்கு என்கின்ற பொதுவுடைமை போன்ற படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்த விஜய் சேதுபதி தொடர்ந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியாகிய ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தில் 55 வயது முதியவராக நடித்து அசத்திய விஜய் சேதுபதி, அடுத்ததாக போலீஸ் வேடத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்த மாகியிருக்கிறார்.
பண்ணையாரும் பத்மினியும் அருண்குமார் இயக்கத்தில் ஒரு வலுவான காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி, படத்திற்கு காசேதுபதி எனப் பெயரிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காக்க காக்க படத்தில் சூர்யா நடித்தது போன்ற ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.