Don't Miss!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- News ஹலோ எங்க வீட்ல மொத்தம் 5 ஓட்டு.. சார் நான் ஈபி ரீடிங் எடுக்க வந்திருக்கேன்!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சூரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி
Recommended Video
மதுரையில் 2017ல் "அம்மன்" உயர்தர சைவ உணவகத்தை துவக்கினார் திரையுலகில் இன்று முன்னிலை வகித்து வரும் நகைச்சுவை நடிகர் சூரி. மக்களின் ஏகபோக வரவேற்ப்பையும் ஆதரவையும் பெற்றதால் 'அம்மன் ' உயர்தர சைவ உணவகம் மற்றும் 'அய்யன் ' உயர்தர அசைவ உணவகம் என இரு கிளைகளை மதுரையில் துவக்கியுள்ளார்.
இந்த இரண்டு உணவகங்களின் திறப்பு விழா நவம்பர் 1ம் தேதியான நேற்று விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் சூரியின் உடன் பிறவா சகோதரரான நடிகர் சிவா கார்த்திகேயன் குத்துவிளக்கேற்றி உணவகங்களை திறந்து வைத்தார்.
அந்த வகையில் இன்று சூரியின் உணவகத்திற்கு சர்ப்ரைசாக விஜயம் புரிந்துள்ளார் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி.
சூரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நோக்கத்தில் விஜய் சேதுபதி அவரது உணவகத்திற்கு திடீர் வருகை செய்துள்ளார்.
உணவகத்திற்கு சென்ற விஜய் சேதுபதி அங்கு உணவு உண்டு சூரியின் உறவினர்களோடு செல்ஃபீ எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வு சூரி மற்றும் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் முதன்மையானவர். மிகவும் எதார்த்தமான, அன்பான மனிதர். எந்த ஒரு பாகுபாடுமின்றி அனைவரிடத்திலும் சமமாக பழகக்கூடியவர்.
சிவகார்த்திகேயன் - சூரி இணைந்து பல படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதிக்கு சூரிக்கும் ஒரு நல்ல நட்புறவு இருப்பது பலருக்கு தெரியாது. நட்பின் காரணமாக சூரி துவங்கியுள்ள உணவகத்திற்கு விஜய் சேதுபதி தீடீர் வருகை புரிந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.